ADVERTISEMENT

மது போதையில் கர்ப்பிணி மனைவியை அடித்துக் கொன்ற கணவன்

10:25 AM Oct 05, 2023 | kalaimohan

ADVERTISEMENT

ADVERTISEMENT

மது போதையில் இருந்த கணவன் கர்ப்பிணி மனைவியை பூரிக்கட்டையால் அடித்து கொலை செய்த கொடூர சம்பவம் திருப்பூரில் நிகழ்ந்துள்ளது.

மகாராஷ்டிராவில் இருந்து புலம்பெயர்ந்து திருப்பூருக்கு அருகில் உள்ள திருமுருகன் பூண்டி நகராட்சியில் ஒப்பந்த அடிப்படையில் துப்புரவுப் பணியில் அணில்பவார் என்பவர் பணியாற்றி வந்தார். இவருடைய மனைவி ரேகா. இந்த தம்பதிக்கு இரண்டு குழந்தைகள் உள்ள நிலையில் ரேகா ஐந்து மாத கர்ப்பிணியாக இருந்தார். இவர்கள் அம்மாபாளையம் பகுதியில் வசித்து வந்தனர்.

அடிக்கடி மதுபோதையில் வீட்டுக்கு வரும் கணவர் அணில்பவார் மனைவி ரேகாவுடன் சண்டை இடுவதை வழக்கமாக கொண்டுள்ளார். இந்நிலையில் சம்பவத்தன்று மதுபோதையில் வந்த அணில் பவார் வழக்கம்போல் தகராற்றில் ஈடுபட்ட பொழுது மதுபோதையில் நிதானத்தை இழந்து பூரி கட்டையால் மனைவி ரேகாவை தாக்கியதாகக் கூறப்படுகிறது. இதனால் ரேகா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். பின்னர் இரண்டு குழந்தைகளை அழைத்துக் கொண்டு பேருந்தில் தப்பமுயன்ற நிலையில், கரூரில் வைத்து போலீசார் கைது செய்துள்ளனர். மதுபோதையில் கர்ப்பிணி மனைவியை கணவரே அடித்துக் கொன்ற சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT