ADVERTISEMENT
சென்னை அடையாறு புற்றுநோய் மருத்துவமனைத் தலைவர் சாந்தா(93) உடல்நலக்குறைவு காரணமாக காலமானார்.
ADVERTISEMENT
சென்னை அடையாறு மருத்துவமனைத் தலைவர் சாந்தா, அப்போலோ மருத்துவமனையில் இதயநோய் சம்பந்தமாக சிகிச்சை பெற்றுவந்தார். இந்நிலையில் சிகிச்சை பலனளிக்காமல் இன்று (19 ஜன.) காலை காலமானார்.
மருத்துவர் சாந்தா மறைவையொட்டி பிரதமர் மோடி, முதல் பழனிசாமி உள்ளிட்ட அரசியல் பிரமுகர்களும், விவேக் உள்ளிட்ட பல்வேறு திரை பிரபலங்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். மேலும், அடையாறு புற்றுநோய் மருத்துவமனை வளாகத்தில் வைக்கப்பட்டுள்ள மருத்துவர் சாந்தாவின் உடலுக்கு மருத்துவமனை ஊழியர்கள், பொதுமக்கள், மற்றும் அரசியல், திரை பிரபலங்கள் பலரும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
Show comments