ADVERTISEMENT

9 குட்டிகளை ஈன்று சாதனை புத்தகத்தில் இடம் பிடித்த நாய்

11:37 PM Sep 10, 2022 | suthakar@nakkh…

ADVERTISEMENT

ADVERTISEMENT

புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி நாட்டுக்கல் சேர்ந்தவர் பொறியியல் பட்டதாரி ஹரிஸ். செல்லப்பிராணிகள் வளர்ப்பதில் அதீத ஆர்வம் கொண்டதால் லசாப்சோ என்ற இனத்தை சேர்ந்த நாய் ஒன்றை வாங்கி ஜாய் என பெயரிட்டு வளர்த்துள்ளார். தற்போது ஒரே நேரத்தில் 9 குட்டிகளை ஈன்றுள்ளது ஹரீசின் செல்லப் பிராணியான ஜாய்லசாப்சோ இன நாய்கள் பற்றிய தகவல் அறிய இணையத்தில் தேடிய போது இந்த வகை நாய்கள் 3 முதல் 5 குட்டிகள் மட்டுமே ஈனும் என்ற தகவல் அறிந்தவர், அதன் பிறகு தேடிய போது தனது ஜாய் ஈன்றது போல 9 குட்டிகள் வரை எந்த லசாப்சோ இன நாயும் குட்டிகள் ஈன்றதில்லை என்பதை உறுதி செய்த பிறகு இந்தியா புக் ஆப் ரெக்கார்ட்ஸ் என்ற சாதனைக்கான பதிவிற்காக விண்ணப்பித்தார். பல்வேறு ஆய்வுகளுக்கு பிறகு ஜாய் 9 குட்டிகள் ஈன்றதை சாதனையாக கருதி இந்தியா புக் ஆப் ரெக்கார்ட்ஸ் சாதனைப் புத்தகத்தில் பதிவு செய்து சான்றிதழும் பதக்கமும் வழங்கியுள்ளனர். ஒரு சிறிய ரக நாய் அதிக குட்டிகளை ஈன்று சாதனைபடைத்துள்ளதை பெருமையாக பேசி வருகின்றனர்.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT