ADVERTISEMENT

'தமிழகத்தில் டெல்லியைப் போன்ற பதட்டநிலையை உண்டாக்க வேண்டாம்'- எடப்பாடி பழனிசாமி பேச்சு

12:09 PM Mar 13, 2020 | kalaimohan

என்பிஆர் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கிறது என்ற அறிவிப்பை அதிமுக வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்திருந்த நிலையில், இன்று சட்டப்பேரவையில் எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் ,அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேசியதை அப்படியே சட்டப்பேரவையில் பதிவு செய்து தீர்மானமாக நிறைவேற்ற வேண்டும் என பேசினார்.

ADVERTISEMENT

ADVERTISEMENT


அதற்கு பதிலளித்த முதல்வர், மத்திய அரசு கொண்டுவந்துள்ள இந்த திட்டத்தை எதிர்த்து தீர்மானம் நிறைவேற்றவில்லை. மக்களிடம் ஒரு அச்சத்தை தொடர்ச்சியாக ஏற்படுத்திக்கொண்டிருக்கிறீர்கள். அமைச்சர்கள் சிறைக்கு செல்வீர்கள் என்ற அச்ச உணர்வை ஏற்படுத்தும் விதமாக திமுகவினர் பேசி வருவதாக ஒரு குற்றச்சாட்டை வைத்தார்.

மேலும் பேசிய அவர், என்பிஆர் விவகாரத்தில் சிறுபான்மை மக்களிடையே எதிர்க்கட்சிகள் அச்சத்தை ஏற்படுத்தக்கூடாது. எந்த இடத்தில் என்ன பாதிப்பு என்பதை சொல்லாமல், அமைதியாக இருக்கும் தமிழகத்தில் டெல்லியைப் போன்று பதட்டத்தை உண்டாக்க வேண்டாம். என்பிஆர் விவகாரத்தில் அச்சத்தை ஏற்படுத்தாமல் உண்மைகளை மக்களுக்கு எடுத்து சொல்லுங்கள். சட்டப்பேரவைக்குள் ஒன்று பேசி, வெளியே சென்று வேறுமாதிரியாக எதிர்க்கட்சிகள் பெரிதாக்க கூடாது என்றார்.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT