அந்த ஓட்டல் கட்டிடமே அதிர்ந்தது . ஓட்டலில் உள்ள நீச்சல் குளத்தில் குண்டு வெடிப்பின் போது தண்ணீர் பல அடி உயரத்துக்கு மேலே எழும்பியது அதைப் பார்த்ததும் சுனாமி வந்து விட்டது என்று நினைத்தோம். அதுக்குப் பிறகு மக்கள் அலறியடித்து கொண்டு போயிட்டு இருந்தனர் . பின்பு ஓட்டல் ஊழியர்கள் அறைக்கு வந்து எங்களை பாதுகாப்பாக கீழே அழைத்துச்சென்றனர், எங்களுக்கு என்னவென்று செய்வது அறியாமல் பயத்தில் இருந்தோம் . இந்த சம்பவத்தை அறிந்த கவிஞர் வைரமுத்து அவர்கள் எங்களை தொடர்பு கொண்டு சம்பவத்தைப் பற்றி கேட்டு நலம் விசாரித்தார் . அதன் பிறகு எனது குடும்பத்தினர், நண்பர்கள் தொடர்பு கொண்டு விவரத்தை கேட்டனர். நாங்கள் பாதுகாப்பாக இருப்பதாக தெரிவித்தோம்.கோவை வந்த பின்னர் தான் எங்களுக்கு உயிரே வந்தது. எனது வாழ்நாளில் இப்படி ஒரு சம்பவத்தை மறக்கவே முடியாது என்று கூறியுள்ளார் .