இலங்கையில் தொடர்ச்சியாக 8 இடங்களில் நடைபெற்ற வெடிகுண்டு தாக்குதலில் மொத்தம் 207பேர்உயிரிழந்த நிலையில் இந்த சம்பவம்தெடர்பாக 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக இலங்கை பாதுகாப்புத்துறை அமைச்சர் ருவன் விஜயவர்தன தெரிவித்துள்ளார்.
style="display:block" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="8689919482" data-ad-format="link" data-full-width-responsive="true">
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
இலங்கையில் 8 இடங்களில் நடந்த அடுத்தடுத்த குண்டுவெடிப்பு சம்பவங்கள் நடைபெற்று சுமார் 207 பேர்உயிரிழந்துள்ளனர். 500க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். இதனால் இலங்கையில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும் வதந்திகள் பரவலாம் என சமூக வலைத்தளங்களான பேஸ்புக், டுவிட்டர் போன்றவை முடக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில் இந்த பயங்கர குண்டுவெடிப்பு சம்பவத்தில் இந்தியர்கள் 3 பேர் உயிரிழந்துள்ளதாக மத்திய அமைச்சர் சுஷ்மா சுவராஜ் ட்விட்டரில் தெரிவித்துள்ளார். இந்தியாவை சேர்ந்தலோகாஷினி,நாராயணன் சந்திரசேகர், ரமேஷ் உயிரிழந்ததாக சுஷ்மா சுவராஜ் தெரிவித்துள்ளார்.