ADVERTISEMENT

"நான் பா.ஜ.க.வில் சேரவில்லை... ஆனால் ஸ்டாலின் முறையாக.." -கு.க செல்வம் பேச்சு!

06:34 PM Aug 04, 2020 | suthakar@nakkh…

ADVERTISEMENT

ADVERTISEMENT

சென்னை ஆயிரம் விளக்கு தொகுதி தி.மு.க. எம்.எல்.ஏ. கு.க செல்வம் பா.ஜ.க. தேசியத்தலைவர் ஜே.பி.நட்டா தலைமையில், பா.ஜ.க.வில் இணைந்ததாக வந்த தகவலை மறுத்துள்ளார்.

தி.மு.க.வில் கருத்து வேறுபாடு காரணமாக அதிருப்தியில் இருந்து வந்த சென்னை ஆயிரம் விளக்கு சட்டமன்ற உறுப்பினர் கு.க. செல்வம் தி.மு.க.வில் இருந்து விலகி பா.ஜ.க.வில் இணைய உள்ளதாக இன்று காலை முதலே தகவல் வெளியாகி வந்தது. இந்நிலையில், அதை உறுதிப்படுத்தும் விதமாக ஸ்டாலின் தலைமையில் தி.மு.க. முன்னணியினர் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் இன்று காலை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்றது. இதற்கிடையே டெல்லியில் ஜே.பி. நட்டா வீட்டில் கு.க. செல்வம் தன்னை இணைத்துக் கொள்வார் என்று எதிர் பார்க்கப்பட்டது. இதற்கிடையே அவரை சந்தித்துப் பேசிய பிறகு செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய அவர், நான் பா.ஜ.க.வில் இணையவில்லை என்று தெரிவித்துள்ளார். மேலும் பேசிய அவர் ஸ்டாலின் தி.மு.க.வில் உள்கட்சி தேர்தலை முறையாக நடத்த வேண்டும் என்றும், முருக கடவுள் குறித்து தவறாக பேசியவர்களை ஸ்டாலின் கண்டிக்க வேண்டும் என்றும் தெரிவித்தார். தி.மு.க.வுக்கு வெளியில் கு.க.செல்வத்தை வைத்து அக்கட்சிக்கு குடைச்சல் கொடுக்க பா.ஜ.க. முடிவு செய்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT