ADVERTISEMENT

விவசாயிகளுக்கு ஆதரவாக தி.மு.க. டிசம்பர் 5- ஆம் தேதி ஆர்ப்பாட்டம்

11:59 AM Dec 03, 2020 | santhoshb@nakk…

ADVERTISEMENT

ADVERTISEMENT

தமிழகம் முழுவதும் வரும் டிசம்பர் 5- ஆம் தேதி விவசாயிகளுக்கு ஆதரவாக ஆர்ப்பாட்டம் என தி.மு.க. அறிவித்துள்ளது.

இன்று (03/12/2020) காலை 10.30 மணியளவில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டம் காணொளி மூலம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் டெல்லி விவசாயிகளின் போராட்டம் குறித்து ஆலோசிக்கப்பட்டது. அதேபோல் கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

அதில், நாளை மறுநாள் (05/12/2020) மாவட்ட தலைநகரங்களில் காலை 10.00 மணிக்கு கறுப்புக்கொடி ஏந்தி, வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக தி.மு.க. சார்பில் போராட்டம் நடத்தப்படும் என அறிவித்துள்ளது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT