ADVERTISEMENT

நாளை விஜயகாந்த் பிரச்சாரம்! எங்கு? -பிரேமலதா அறிவிப்பு

01:58 PM Apr 14, 2019 | kalaimohan

நடக்கவிருக்கின்ற நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு தமிழகத்தில் அரசியல் பிரச்சார களம் சூடுபிடித்துள்ளது. தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் அனைவரும் அவரவர் வேட்பாளர்கள் மற்றும் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து தமிழகம் முழுவதும் சூறாவளி பிரச்சார பயணத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

ADVERTISEMENT

ADVERTISEMENT

இந்நிலையில் விழுப்புரத்தில் பரப்புரை மேற்கொண்ட தேமுதிக பொருளாளர் பிரேமலதாவிஜயகாந்த், தேமுதிக தலைவர் விஜயகாந்த் நாளை மற்றும் நாளை மறுநாள் சென்னையில் பரப்புரையை தொடங்குவார் என தெரிவித்துள்ளார்.

உடல்நலக்குறைவின் காரணமாக அமெரிக்காவிற்கு சென்று திரும்பிய தேமுதிக தலைவர் விஜயகாந்த் அரசியல் மேடைகளிலும், பொதுக்கூட்டங்களிலும் இதுவரை பேசாத நிலையில் தற்போது நாளை மற்றும் நாளை மறுநாள் சென்னையில் விஜயகாந்த் பிரச்சாரம் செய்வார் என தேமுதிக பொருளாளர் பிரேமலதாவிஜயகாந்த் கூறியிருக்கிறார்.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT