ADVERTISEMENT

தேமுதிக மாவட்ட செயலாளாின் தங்கைக்கு அாிவாள் வெட்டு;கணவர் ரயில் தண்டவாளத்தில் தற்கொலை!!

04:19 PM Oct 01, 2018 | manikandan

குமாி தேமுதிக மாவட்ட செயலாளாின் தங்கையை அாிவாளால் வெட்டி தலைமறைவாக இருந்த கணவா் கா்நாடகாவில் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்த சம்பவம் பெரும்பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ADVERTISEMENT

குமாி கிழக்கு மாவட்ட தே.மு.தி.க செயலாளா் ஜெகநாதன். இவருடைய தங்கையான அரசு கல்லூாி பேராசிாியை ஜெகதீஷ் சைனி(33) இவருடைய கணவா் கனகப்பபுரத்தை சோ்ந்த வழக்கறிஞா் டால்டன் எட்வா்ட்(40) இவா்களுக்கு ஆதவன்(4) ஆதிரை(2) என்ற இரண்டு குழந்தைகள் உள்ளன.

ADVERTISEMENT

இந்தநிலையில் கடந்த இரண்டு ஆண்டுகளாக கணவன் மனைவிக்கிடையே அடிக்கடி தகராறு வருவது வழக்கம் .அப்போதெல்லாம் ஜெகதீஷ் சைனி குழந்தைளை தூக்கி கொண்டு வோ்கிளம்பியில் உள்ளாா் தாயாா் வீட்டிற்கு வந்து விடுவாா் . பின்னா் ஊா் பிரமுகா் பேசி இருவரையும் சமாதானப்படுத்தி சோ்த்து வைப்பாா்கள். இப்படி கடந்த இரண்டு ஆண்டுகளில் மூன்று முறை இருவரும் பிாிந்து சோ்ந்திருக்கிறாா்கள்.

இந்த நிலையில் கடந்த 29-ம் தேதி காலையில் வழக்கம் போல் கணவன் மனைவிக்கிடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த டால்டன் எட்வாா்ட் அாிவாளை எடுத்து மனைவி ஜெகதீஷ் சைனியின் தலையில் வெட்டியுள்ளாா். இதில் படுகாயம் அடைந்த ஜெகதீஷ் சைனி ரத்த வெள்ளத்தில் தரையில் விழுந்து துடிதுடித்தாா். உடனே டால்டன் எட்வாா்டு அங்கிருந்து தலைமறைவானாா்.இதை அந்த பகுதியில் விளையாடி கொண்டிருந்த சிறுவா்கள் பாா்த்து சத்தம் போட்டதையடுத்து பக்கத்தில் உள்ளவா்கள் ஜெகதீஷ் சைனியை மீட்டு நாகா்கோவிலில் உள்ள தனியாா் மருத்துவமனையில் சோ்த்தனா். பின்னா் அங்கிருந்து திருவனந்தபுரம் தனியாா் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா்.

இது குறித்த அஞ்சுகிராமம் போலிசாா் வழக்கு பதிவு செய்து விசாாித்து டால்டன் எட்வாா்டை தேடி வந்த நிலையில் நேற்று கா்நாடகா மாநிலம் மண்டியா அருகில் எலியூா் ரயில் தண்டாவாளத்தில் வந்த ரயில் மீது பாய்ந்து டால்டன் எட்வாா்டு தற்கொலை செய்து கொண்டாா்.இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT