Skip to main content

தேமுதிக பிரமுகர் வெட்டி படுகொலை!; நள்ளிரவில் வீடு புகுந்து வெறிச்செயல்!!

Published on 19/08/2018 | Edited on 27/08/2018

தலைவாசல் அருகே, வீட்டில் தனியாக தூங்கிக் கொண்டிருந்த தேமுதிக பிரமுகரை நள்ளிரவு நேரத்தில் வீட்டுக்குள் புகுந்து மர்ம நபர்கள் சரமாரியாக வெட்டி படுகொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

 

murder

 

 

 

சேலம் மாவட்டம் தலைவாசல் அருகே உள்ள புத்தூர் வடக்குக்காடு பகுதியைச் சேர்ந்தவர் கலியமூர்த்தி (40). விவசாயி. சில ஆண்டுகள் தேமுதிக கிளைச்செயலாளர் பொறுப்பிலும் இருந்தார். இவருடைய மனைவி ஆலயமணி (30) இவர்களுக்கு ராம்குமார் (16), அருண்குமார் (14) என இரண்டு மகன்கள் உள்ளனர். நேற்று முன்தினம் (ஆகஸ்ட் 17, 2018) இரவு ஆலயமணி, தன் இரு மகன்களுடன் திருநள்ளாறுக்கு பஸ்சில் கிளம்பிச் சென்றார். அவர்களை வழியனுப்பி வைத்த கலியமூர்த்தி, அன்று இரவு வீட்டில் தனியாக படுத்துக் தூங்கினார். 

murder

 

 

 

மறுநாள் (ஆகஸ்ட் 18, 2018) காலையில் நீண்ட நேரமாகியும் அவருடைய வீட்டுக்கதவு திறக்கப்படவில்லை. அவருடைய வீடு அருகே வசித்து வரும் சித்தப்பா சந்தேகத்தின்பேரில் வீட்டுக்குச் சென்று கதவைத் தட்டினார். கதவு உள்பக்கம் தாழிடாமல் திறந்தது. உள்ளே சென்று பார்த்தபோது அங்கே கலியமூர்த்தி, பலத்த காயங்களுடன் சடலமாக கிடந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த தலைவாசல் போலீஸ் இன்ஸ்பெக்டர் குமரவேல் பாண்டியன் மற்றும் போலீசார் நிகழ்விடம் விரைந்தனர். சடலத்தைக் கைப்பற்றி தீவிரமாக விசாரணை நடத்தியதில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.

 

 

நேற்று முன்தினம் நள்ளிரவுக்கு மேல் வீட்டுக்குள் புகுந்த மர்ம நபர்கள், கலியமூர்த்தியை அரிவாளால் சரமாரியாக வெட்டிக்கொன்று விட்டு தப்பி ஓடியுள்ளது. தலை, கழுத்து, மார்பு, கைகள், வயிறு என முப்பதுக்கும் மேற்பட்ட வெட்டுக்காயங்கள் இருப்பது தெரிய வந்தது. ஆனால், நிகழ்விடத்தில் இருந்து ஆயுதங்கள் ஏதும் கைப்பற்றப்படவில்லை. நோப்ப நாய் மூலம் சோதனை நடத்தியதிலும், தகவல்கள் ஏதும் கிடைக்கவில்லை. 

 

 

இதற்கிடையே திருநள்ளாறுக்குச் சென்ற ஆலயமணியும், அவருடைய மகன்களும் வீடு திரும்பினர். ஆலயமணியிடம் விசாரித்ததில் முன்னுக்குப் பின் முரணான தகவல்களைச் சொன்னார். ஆலயமணி அடிக்கடி கோல்களுக்குச் சென்று வந்துள்ளார். எப்போதும் தனியாகவே சென்றுவிட்டு வீடு திரும்பும் அவர், நேற்று முன்தினம் இரவு தன் இரு மகன்களுடன் திருநள்ளாறுக்குச் சென்றது போலீசாரை யோசிக்க வைத்துள்ளது. சில ஆண்டுக்கு முன்பு, திருவண்ணாமலைக்குச் சென்றிருந்தபோது விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சியைச் சேர்ந்த ஒரு பெண்ணுடன் ஆலயமணிக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. அவர் மூலமாக கள்ளக்குறிச்சியைச் சேர்ந்த டிராவல்ஸ் நிறுவனம் ஒன்றில் டிரைவராக வேலைபார்க்கும் குமார் என்ற வாலிபருடன் ஆலயமணிக்கு தொடர்பு ஏற்பட்டு, அவருடன் நெருங்கிப் பழகி வந்துள்ளார்.

 

 

வீட்டில் கலியமூர்த்தி இல்லாதபோது குமாரை தன் வீட்டிற்கே வரவழைத்து அவருடன் ஆலயமணி நெருக்கமாக இருந்து வந்திருப்பதும் விசாரணையில் தெரிய வந்துள்ளது. கலியமூர்த்தி கொலை செய்யப்பட்ட அன்றும், அதற்கு சில நாள்கள் முன்பும் அவர் குமார் மற்றும் சிலருடன் செல்போனில் அடிக்கடி பேசி வந்திருப்பதும் தெரிய வந்துள்ளது. இதனால் ஆலயமணியும், கள்ளக்காதலன் குமாரும் சேர்ந்து கூலிப்படையினர் மூலம் கலியமூர்த்தியை தீர்த்துக்கட்டியிருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர்.

 

 

 

 

இதையடுத்து ஆத்தூர் போலீஸ் டிஎஸ்பி பொன்கார்த்திக்குமார் தலைமையிலான தனிப்படை போலீசார், கள்ளக்குறிச்சியைச் சேர்ந்த குமார் மற்றும் சந்தேகத்திற்குரிய மேலும் சிலரையும் நேரில் அழைத்து வந்து தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். இதுஒருபுறம் இருக்க, கொலையுண்ட கலியமூர்த்திக்கு யாருடனாவது கொடுக்கல், வாங்கல் தொடர்பாக தகராறு இருந்து வந்துள்ளதா? சொத்துப்பிரச்னை தொடர்பாக மோதல் இருந்து வந்துள்ளதா? என்ற கோணங்களிலும் போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி நடத்தி வருகின்றனர்.

சார்ந்த செய்திகள்

Next Story

திருமணத்தை மீறிய உறவு; பெண்ணை பெட்ரோல் ஊற்றி எரித்த நடத்துநர்

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Conductor who doused woman with petrol and her in Krishnagiri

கிருஷ்ணகிரியைச் சேர்ந்தவர் திருப்பதி. இவரது மனைவி சிவகாமி(பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவருக்கும் கிருஷ்ணகிரி பாத்திமா நகரைச் சேர்ந்த அரசு பேருந்து நடத்துனர் மாதவன் என்பவருக்கும் கடந்த ஐந்து ஆண்டுகளாக திருமணத்தை மீறிய உறவு இருந்துள்ளது. இந்த நிலையில் மாதவனுக்கு வேறு சில பெண்களுடன் தொடர்பு  இருப்பதாக கருதிய லட்சுமி மாதவன் உடனான உறவை துண்டித்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து மாதவன் சிவகாமிக்கு தொடர்ந்து தொல்லை கொடுத்து வந்துள்ளார். இந்த நிலையில் நேற்று இரவு வீட்டிற்கு வெளியே சென்று லட்சுமியைப் பின் தொடர்ந்து வந்த மாதவன் சிவகாமியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். மேலும் தன்னுடன் பேசுமாறு வற்புறுத்தியுள்ளார். ஆனால்   இதற்குச் சிவகாமி மறுப்பு தெரிவிக்க, ஆத்திரமடைந்த மாதவன் சிவகாமி மீது பெட்ரோலை ஊற்றி உயிரோடு எரித்துள்ளார். பின்னர் வீட்டின் அருகே உள்ள முட்புதிரில் தீயில் கருகி நிலையில் உயிருக்கு போராடி கொண்டிருந்த சிவகாமியைப் பார்த்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக அவரை மீட்டு கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர்.

இந்த நிலையில் இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் சிவகாமிடம் விசாரணை செய்ததில் மேற்கண்ட விவரங்கள் தெரியவந்துள்ளது. இதை அடுத்து மாதவன் மீது வழக்கு பதிவு செய்த போலீசார் அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்

Next Story

தீ விபத்து; பலி எண்ணிக்கை 6 ஆக உயர்வு!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
incident for hotel near Patna Railway Station Bihar

பீகார் மாநிலம் பாட்னா ரயில் நிலையம் அருகே உள்ள ஹோட்டலில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு படை வீரர்கள் தீயை அணைக்கும் பணியிலும், மீட்புப் பணியிலும் ஈடுபட்டனர். இந்த தீ விபத்தில் சிக்கிய 12 பேர் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக முதற்கட்டமாக அனுப்பி வைக்கப்பட்டனர். இச்சம்பவம் பாட்னாவில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருந்தது. இந்த தீ விபத்தில் சிக்கி 3 பேர் உயிரிழந்ததாகவும், 7 பேர் பலத்த காயமடைந்துள்ளனர் என பாட்னா போலீஸ் எஸ்.எஸ்.பி. ராஜீவ் மிஸ்ரா தெரிவித்திருந்தார்.

இது குறித்து பாட்னா தீயணைப்புத் துறை போலீஸ் டிஜி, ஷோபா ஓஹட்கர் கூறுகையில், “தீயணைப்புத் அணைக்கும் மேற்கொண்டோம். இதுபோன்ற நெரிசலான பகுதிகளில் விபத்துகளை தடுக்க தொடர்ந்து சிறப்பு கவனம் செலுத்தி வருகிறோம். இதுபோன்ற சம்பவங்களைத் தடுக்க நாங்கள் தொடர்ந்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறோம். சிலிண்டர் வெடித்ததால் இந்த தீ விபத்து நடந்தது. இருப்பினும் தற்போது தீ முற்றிலும் அணைக்கப்பட்டது” எனத் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் பாட்னா சட்டம் மற்றும் ஒழுங்கு போலீஸ் டிஎஸ்பி கிருஷ்ணா முராரி கூறுகையில், “இந்த தீ விபத்தில் 5 முதல் 6 பேர் வரை இறந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சுமார் 30க்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டுள்ளனர். அதில் பலத்த காயம் அடைந்த 7 பேர் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்” எனத் தெரிவித்தார்.