ADVERTISEMENT

சிறப்பாக தேர்தல் பணியாற்றிய ஊராட்சிகளின் உதவி இயக்குநர் கங்காதரணிக்கு திண்டுக்கல் கலெக்டர் பாராட்டு!   

10:18 AM Jan 29, 2020 | kalaimohan

திண்டுக்கல் மாவட்டத்தில் சிறப்பாக தேர்தல் பணியாற்றிய ஊராட்சிகளின் உதவி இயக்குநர் கங்காதரணிக்கு கலெக்டர் விஜயலெட்சுமி குடியரசு தினவிழாவில் பாராட்டு சான்றிதழுடன் பதக்கம் வழங்கினார்.

ADVERTISEMENT

ADVERTISEMENT

திண்டுக்கல் மாவட்டத்தில் சிறப்பாக தேர்தல் பணியாற்றிய ஊராட்சிகளின் உதவி இயக்குநர் கங்காதரணிக்கு 71வது குடியரசு தினவிழாவில் திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் மு.விஜயலெட்சுமி பதக்கம் அணிவித்து பாராட்டு சான்றிதழ் வழங்கி வாழ்த்து தெரிவித்தார். ரெட்டியார்சத்திரம் ஒன்றியத்தில் சிறு பிரச்சனைகள் கூட இல்லாமல் சிறப்பாக தேர்தல் பணியாற்றியதற்காக பாராட்டை பெற்றார்.

திண்டுக்கல் மாவட்டத்தில் ஊராட்சிகளின் உதவி இயக்குநராக பணியாற்றி வருபவர் தேனி மாவட்டத்தை சேர்ந்தவர் கங்காதரணி. இவர் நடந்து முடிந்த உள்ளாட்சி தேர்தலின் போது சிறப்பாக தேர்தல் பணியாற்றி அனைவரின் பாராட்டையும் பெற்றார். ஜனவரி 26ம் தேதி திண்டுக்கல் மாவட்ட விளையாட்டு அரங்கில் நடைபெற்ற 71வது குடியரசு தினவிழாவில் திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் மு.விஜயலெட்சுமி, ஊராட்சிகளின் உதவி இயக்குனர் கங்காதரணிக்கு பாராட்டு சான்றிதழும், பதக்கமும் வழங்கி கைகுலுக்கி வாழ்த்து தெரிவித்தார்.

பெண் அதிகாரியாக இருந்தும் ஆண்களுக்கு இணையாக உள்ளாட்சி தேர்தலில் இவர் பணியாற்றியது குறிப்பிடத்தக்கது. பாராட்டு சான்றிதழும் பதக்கமும் பெற்ற ஊராட்சிகளின் உதவி இயக்குனர் கங்காதரணிக்கு திட்ட இயக்குனர் கவிதா மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர்கள், மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள், ஊராட்சிகளின் உதவி இயக்குநர் அலுவலக அலுவலர்கள், பணியாளர்கள் ஊராட்சி செயலர்கள் பாராட்டும், வாழ்த்தும் தெரிவித்தனர்.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT