Skip to main content

டெங்கு பாதிப்பால் தீபாவளியிலும் அரசுமருத்துவமனையில் குவிந்த மக்கள்...  லேப் டெக்னிஷியன் இல்லாமல் தவிக்கும் மருத்துவமனை...

Published on 26/10/2019 | Edited on 26/10/2019

தமிழகமே தீபாவளி பண்டிகை கொண்டாட்டத்தில் உள்ள நிலையில் வேலூர் மாவட்டம், குடியாத்தம் நகரில் உள்ள அரசு பொதுமருத்துவமனையில் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது. வேலூர் மாவட்டத்தில் டெங்கு காய்ச்சலுக்கு இதுவரை 6 பேருக்கு மேல் மரணமடைந்துள்ள நிலையில், குடியாத்தம் பகுதியில் மட்டும் இரண்டு பேர் மரணத்தை தழுவியுள்ளார்கள். ஆயிரக்கணக்கானவர்கள் காய்ச்சலால் அரசு மருத்துவமனை, தனியார் மருத்தவமனை மற்றும் கிளினிக்குகளில் நோயாளிகள் கூட்டம் அதிகமாகவே உள்ளது.
 

blood lab

 

இந்நிலையில் அக்டோபர் 26ந்தேதி காலை முதலே குடியாத்தம் அரசு மருத்துவமனையில் ஆயிரத்துக்கும் அதிகமான புறநோயாளிகள் காய்ச்சலுக்கு சிகிச்சை பெற வந்துள்ளனர். 5 நாட்களை காய்ச்சல் தாண்டி விட்டால் ரத்த பரிசோதனை செய்வது நடைமுறை. அதன்படி குடியாத்தம் அரசு மருத்துவமனையில், கடந்த சில நாளாக ரத்தம், சிறுநீர் பரிசோதிக்க ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் குவிகின்றனர்.

இந்த மருத்துவமனையில் இருப்பதோ 3 லேப் டெக்ஷியன்கள் மட்டுமே. இவர்களில் யாராவது ஒருவர் விடுமுறை எடுத்தாலோ அல்லது ரத்த தான முகாம் போன்ற மாற்றுபணிக்கு சென்றாலோ நோயாளிகள் நிலைமை பரிதாபத்துக்குரியதாகிவிடுகிறது. நீண்ட நேரம் காத்திருப்பு, கர்ப்பிணி பெண்களுக்க முன்னுரிமை, தொற்று நோய் அபாயம் போன்றவற்றால் நோயாளிகள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர்.

இந்த பிரச்சனைகளை கலைய உடனடியாக மாற்று ஏற்பாடு செய்து கூடுதலான லேப் டெக்னிக்ஷியன்களை தற்காலிகமாக மாவட்ட நிர்வாகம் நியமனம் செய்ய வேண்டும் அல்லது பயிற்சி மாணவர்களையாவது சேவை அடிப்படையில் பணியமர்த்த  நடவடிக்கை எடுக்க வேண்டும் என்கிற கோரிக்கை ஏழை மக்களிடையே எழுந்துள்ளது. 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

பந்தல் அமைக்கும் போது மின்சாரம் தாக்கி விபத்து-இருவர் உயிரிழப்பு

Published on 19/11/2023 | Edited on 19/11/2023

 

Two people were Lose their live in an electric shock while setting up a pandal at home

 

வேலூரில் பந்தல் அமைக்கும் பணியில் ஈடுபட்ட இருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

 

வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த காளியம்மன்பட்டி பகுதியில் மொகிலி (39) என்பவர் கட்டிட கூலி வேலை செய்து வருகிறார். இவருக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ள நிலையில் இவரது வீட்டில் நாளை நடக்கும் நிகழ்ச்சிக்காக வீட்டின் மாடியில் பந்தல் அமைக்க மொகிலி முன்றுள்ளார். அவரது உறவினரான பெங்களூரை சேர்ந்த கிஷோர் (22) என்பவரும் மோகிலியும் இரும்பு பைப்புகளை மாடிக்கு எடுத்துச் சென்றனர். அப்போது உயரழுத்த மின் கம்பி இரும்பு பைப் மீது உரசியதில் இருவரும் மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்டனர். அங்கிருந்தவர்கள் இருவரையும் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் குடியாத்தம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்ற நிலையில் அங்கு பரிசோதனை மேற்கொண்ட மருத்துவர்கள் அவர்கள் வரும் வழியிலேயே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். 

 

இந்த சம்பவம் குறித்து குடியாத்தம் நகர போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மின்சாரம் தாக்கி இரண்டு பேர் உயிரிழந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

 

Next Story

டெங்கு காய்ச்சலிலிருந்து நம்மை பாதுகாப்பது எப்படி? - டாக்டர் அருணாச்சலம் விளக்கம்

Published on 19/10/2023 | Edited on 19/10/2023

 

Dr Arunachalam - Health care - dengue fever

 

மழைக்காலங்களில் பெருகி வரும் டெங்கு காய்ச்சல் ஏன் ஏற்படுகிறது. அதிலிருந்து நம்மை எவ்வாறு பாதுகாத்துக் கொள்வது என்ற கேள்வியை பிரபல மருத்துவர் அருணாச்சலம் அவர்களிடம் கேட்டோம். அதற்கு அவர் அளித்த விளக்கம் பின்வருமாறு...

 

பருவகால மாற்றத்தால் பருவ மழை சீக்கிரமாகவே வந்து விட்டது. இதை எதிர் பார்க்காமலேயே நாம் முன்னரே மழை நீர் வடிகாலுக்கான குழிகளைத் தோண்டிப் போட்டிருந்தோம். அது பெரிய சாலைகளிலும், தெருப்புற உட்சாலைகளிலும் மூடப்படாமலே இருந்து கொண்டு தான் இருக்கிறது. 

 

இப்படி மூடப்படாத கழிவுநீர் கால்வாய்களில் தேங்கி நிற்கிற நீரில் கொசு முட்டைகள் அதிக அளவில் உற்பத்தியாகி அவை டெங்கு காய்ச்சல் நோக்கி இழுத்துச் செல்கிறது. அது போக நோய் பற்றிய விழிப்புணர்வை நாம் அனைவரும் கொண்டிருக்க வேண்டும். ஒரு குழந்தை டெங்கு காய்ச்சலால் இறந்த பிறகு மாநகராட்சி தரப்பிலிருந்து விழிப்புணர்வை ஆரம்பித்தார்கள். ஆனால் அது பெரிய அளவில் போய்ச்சேரவில்லையோ என்று சந்தேகிக்க வைக்கிறது.

 

இரவில் மட்டுமே கடித்துக் கொண்டிருந்த கொசு, அதிகமாக பெருகி இப்போதெல்லாம் பகலிலேயே கடிக்கிறது. அதை நாம் கவனத்தில் எடுத்துக் கொண்டு கொசுக் கடியிலிருந்து தற்காத்துக் கொள்ள வேண்டும். வீடுகளில் சுற்றி இருக்கிற பழைய பொருட்களில் நீர் எதுவும் தேங்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும். நீர் தேங்கிய பொருட்களில் பிளீச்சிங்க் பவுடரை தெளித்து கொசு பெருகாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். வீடுகளில் கொசு வலைகளை வைத்து கொசு நுழைவை தடுக்க வேண்டும். இதுவே டெங்கு காய்ச்சலிலிருந்து நம்மை பாதுகாத்துக் கொள்ளும் வழிமுறைகளாகும்.