காஞ்சிபுரம் அத்திவரதர் கோவில் பாதுகாப்பு பணியில் இருந்த காவல் ஆய்வாளரை பணி செய்ய விடாமல் தடுத்து தரக்குறைவாக பேசிய காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் பொன்னையா மீது மாநில மனித உரிமை ஆணையம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியிருக்கும் நிலையில் திருச்சி காவல்துறை ஓய்வூதியர் நல சங்கம் சார்பில் காவல்துறை ஆய்வாளரை பணி செய்ய விடாமல் தடுத்த மாவட்ட ஆட்சி தலைவர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ADVERTISEMENT
ADVERTISEMENT
இதில் 100 மேற்பட்ட ஓய்வு பெற்ற காவலர்கள் கலந்து கொண்டு காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் பொன்னயாவுக்கு எதிராக கண்டன கோஷங்கள் எழுப்பினர்.
Show comments