ADVERTISEMENT

டெல்லி சென்ற ஸ்ரீவில்லிபுத்தூரைச் சேர்ந்த நால்வருக்குப் பரிசோதனை!- சில பகுதிகளில் மக்கள் செல்வதற்குத் தடை! 

12:27 PM Apr 01, 2020 | santhoshb@nakk…


டெல்லி நிஜாமுதீனில் நடைபெற்ற இஸ்லாமியர்களின் சிறப்பு வழிபாட்டு கூட்டத்தில் ஸ்ரீவில்லிபுத்தூரைச் சேர்ந்த 4 பேர் கலந்து கொண்டனர்.

இவர்கள் தற்போது விருதுநகர் அரசு மருத்துவமனையில் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு, கண்காணிப்பில் உள்ளனர். இதனைத் தொடர்ந்து, அந்த நால்வரும் வசித்த பேட்டைக்கடை தெரு, முஸ்லிம் தெரும், ஆத்துக்கடை தெரு ஆகிய பகுதிகள் வழியாகப் பொதுமக்கள் வெளியில் செல்லவோ, மற்றவர்கள் உள்ளே வரவோ தடைவிதித்துள்ளனர். தடுப்பு பேரிகார்டுகள் வைத்து, அந்தப் பகுதிகளைக் காவல்துறையினர் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர்.

ADVERTISEMENT

ADVERTISEMENT


வெளியூர் ஆட்களும் அங்குச் செல்வதற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. விருதுநகர் மாவட்ட நிர்வாகம் எடுத்துள்ள இந்த நடவடிக்கையால், அப்பகுதிகள் முழுவதும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன. அங்கு வசிக்கின்ற மக்களைச் சுகாதாரத்துறையினர் கண்காணித்து வருகின்றனர்.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT