சென்னை விமானநிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த பாஜக தமிழக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் பேசுகையில்,
ADVERTISEMENT
ADVERTISEMENT
எதிரணிகளை பார்க்கும் பொழுது அவர்கள் வெறுமனே எதிர்மறை அரசியலையே செய்து கொண்டிருக்கின்றனர். எங்களைப் பொறுத்தமட்டில் நல்ல திட்டங்களை எடுத்துச் செல்ல இருக்கிறோம்.
வர வர ஸ்டாலின் பேச்சுக்களில் தரம் குறைந்து வருகிறது. தரம் குறைந்து பேசுகிறார். ஒரு எதிர்க்கட்சித் தலைவர் என்பதை மறந்து தரம் குறைந்து விமர்சனம் செய்கிறார்.
தூத்துக்குடியில் கண்டிப்பாக வெற்றி பெறுவோம். அதற்காக நேர்மையான அரசியலையும், நேர்மறையான அரசியலையும் எடுத்துச் செல்லவேண்டும் என நினைக்கிறோம்.
இன்று நல்ல திட்டங்களை எடுத்து வைப்போம் நிச்சயமாக எங்கள் கூட்டணிக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருக்கிறது எனக் கூறினார்.
ADVERTISEMENT
Show comments