அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி பேட்டியின் போது சொன்ன அந்த வார்த்தையைக் கண்டித்து, டிசம்பர் 3 இயக்கத்தின் மாநில தலைவர், பேராசிரியர் தீபக், தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியிருக்கிறார்.
‘அமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கு கொஞ்சம் நாவடக்கம் தேவை!
எங்கள் இயலாமையை இழித்துப் பேசித்தான் உங்கள் அரசியல் எதிரியை விமர்சிக்க வேண்டுமோ?
என்ன அரசியல் கற்றீறய்யா நீர்?
இதுதான் உங்கள் அரசியல் நாகரீகமோ?
ஆயிரக்கணக்கான மாற்றுத்திறனுடையோர் ஒன்று சேர்ந்து, ‘நாகரீகமான வார்த்தைகளையே பயன்படுத்த வேண்டும்’ என்ற தீர்மானத்தை, சென்னைப் பிரகடனத்தின்போது, ஒரே குரலில் எழுப்பியுள்ளோம் என்பதை அவருக்கு உரைக்கும் படி சொல்ல வேண்டும்.
அமைச்சரே நாவடக்கம் தேவை!’ என்று கூறியிருக்கிறார்.
காலம் மாறிவிட்டது. நினைத்ததையெல்லாம் பொதுவெளியில் பேசிவிடக் கூடாது. சகலரும் இதை உணரவேண்டும்.