Skip to main content

இபிஎஸ்ஸுக்கு ராசி நன்றாக உள்ளது - ராஜேந்திர பாலாஜி ஆரூடம்

Published on 22/07/2023 | Edited on 22/07/2023

 

The horoscope is good for EPS- Rajendra Balaji Arudam

 

ஆகஸ்ட்  20 ஆம் தேதி மதுரையில்  ‘வீர வரலாற்றின் பொன்விழா எழுச்சி மாநாடு’  என்ற பெயரில் அதிமுக மாநாடு நடைபெறவிருக்கிறது. அதிமுக பொதுச்செயலாளராக இபிஎஸ் பொறுப்பேற்ற பிறகு நடக்கும் அதிமுகவின் இந்த  முதல் மாநில மாநாட்டில் பங்கேற்பது குறித்து, விருதுநகர் மேற்கு மாவட்ட அதிமுக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் சிவகாசியில் நடைபெற்றது.  முன்னாள் அமைச்சர்  கே.டி. ராஜேந்திர பாலாஜி தலைமையேற்றுப் பேசினார்.

 

“விருதுநகர் மேற்கு மாவட்ட அதிமுக நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் என பத்தாயிரத்துக்கும் மேற்பட்டவர்களை இந்த மாநாட்டுக்கு அழைத்துச் செல்லவேண்டுமென முடிவெடுக்கப்பட்டுள்ளது. இபிஎஸ் சந்தோசப்படும் அளவிற்கு நம்முடைய விருதுநகர் மேற்கு மாவட்டம், கழக நிர்வாகிகளையும் பொதுமக்களையும் இளைஞர்களையும் மாநாட்டில் பங்குபெறச் செய்யவேண்டும்.  

 

வருங்காலம் அதிமுகவுக்கே என்பதை நிரூபிக்கும் வகையில் இந்த மாநாட்டில் மிகப் பிரமாண்டமான எழுச்சியை இபிஎஸ் நடத்திக் காண்பிக்கவிருக்கின்றார். விருதுநகர் மேற்கு மாவட்டத்தில் இருந்து ஒட்டு மொத்தமாக கிளைக் கழகச் செயலாளர்கள், கிளைக் கழகப் பொறுப்பாளர்கள், வார்டு கழகச் செயலாளர்கள், வார்டு கழகப் பொறுப்பாளர்கள், ஒன்றிய கழகச் செயலாளர்கள், ஒன்றிய கழக நிர்வாகிகள் மற்றும் அனைத்து நிர்வாகிகளும் பொறுப்பாளர்களும், தங்கள் வசதிகளுக்கு ஏற்ப மக்களைத் திரட்டி கலந்து கொள்ள வேண்டும். இதன் மூலமாக, விருதுநகர் மேற்கு மாவட்ட அதிமுக ஒரு வரலாற்றை உருவாக்க வேண்டும். மாநாட்டிற்கு வரும் வாகனங்களில் மறைந்த முன்னாள் தமிழக முதல்வர்கள் எம்ஜிஆர், ஜெயலலிதா  படங்களுடன், இபிஎஸ்  படமும் பெரிதாக இருக்க வேண்டும்.

 

The horoscope is good for EPS- Rajendra Balaji Arudam

 

கழகத்தின் எதிர்காலமே இன்றைக்கு இபிஎஸ் தான். அதிமுகவின் நம்பிக்கை நட்சத்திரம், விடிவெள்ளியும் இபிஎஸ் தான். அவருக்கு  உரிய முறையில் கட்சி நிர்வாகிகள் அங்கீகாரம் கொடுத்து, அவரது பெயருக்கு இழுக்கு வராமல் பார்த்துக் கொள்ள வேண்டும். திருமணங்கள், கட்சி நிகழ்ச்சிகள் மற்ற நிகழ்ச்சிகளுக்கு விளம்பர போர்டு வைத்தால், இபிஎஸ் படம் உரிய மரியாதையோடு பெரிய படமாக வைக்கவேண்டும். அதற்குக் கீழே என் படம் சிறிதாக இருக்க வேண்டும்.  பல்வேறு சோதனைகளைத்  தாண்டி பல்வேறு இன்னல்களைத்  தாண்டி ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு இந்த இயக்கம் இருக்குமா, இருக்காதா, தொலைந்து விடுமா என்று பேசியவர்களுக்கு மத்தியில், அதிமுக   மிகப்பெரிய இயக்கம் என்பதை நிரூபித்து, தன்னை வளர்த்து, இயக்கத்தையும் வளர்த்திருக்கிறார் இபிஎஸ். அடுத்து அதிமுக ஆட்சிதான் வரப்போகிறது. இபிஎஸ் தான் முதலமைச்சராக வரப்போகிறார்.

 

டில்லியில் இ.பி.எஸ்.ஸுக்கு  கிடைத்த மரியாதையை நாம் பார்க்கிறோம். அங்கு இபிஎஸ்ஸுக்கு முக்கியத்துவம் கொடுத்தது நமக்குக் கிடைத்த மிகப்பெரிய அங்கீகாரம். டில்லியில் ஜெயலலிதாவுக்குப் பிறகு, நமக்குக் கிடைக்கக்கூடிய மரியாதையை மீட்டுக் கொடுத்தவர் இபிஎஸ். மதுரையில் நடைபெற உள்ள அதிமுக மாநாடு திமுகவுக்கு மிகப்பெரிய பயத்தை உருவாக்க வேண்டும்.

 

அடுத்து வரப்போவது அதிமுக ஆட்சிதான், முதல்வர் ஆகப்போவது இபிஎஸ் தான் என்ற நம்பிக்கையை நாம் ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும். மாநாடு ஏற்பாடு குறித்து சிவகாசியில் வரும் 29ம் தேதி விருதுநகர் மாவட்ட ஒருங்கிணைந்த அதிமுக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெறவிருக்கிறது. இந்தக் கூட்டத்தில் முன்னாள் அமைச்சர்கள் தங்கமணி, வேலுமணி, திண்டுக்கல் சீனிவாசன், நத்தம் விஸ்வநாதன், ஆர்.பி. உதயகுமார் உள்ளிட்ட மூத்த அதிமுக நிர்வாகிகள் 13 பேர் கலந்து கொள்கின்றனர்.  

 

திமுகவுக்கு ஏற்பட்டிருக்கும் பல்வேறு பிரச்சனைகள் காரணமாக அவர்களுக்கு தற்போது நேரம் சரியில்லை. அதிமுகவுக்கு ஏறு கட்டமாய் உள்ளது. இபிஎஸ்ஸுக்கு  ராசி மிகவும் அருமையாக உள்ளது. அவர் எதிலும் வெற்றி கண்டுவருகிறார்.  நான்கரை ஆண்டுக்கால ஆட்சியில், பொற்கால ஆட்சியை இபிஎஸ் கொடுத்தார்.  இபிஎஸ் ஆட்சிதான் தங்கமான ஆட்சி என்று பொதுமக்கள் பேசுவதை நாம் கேட்க முடிகிறது. தென் மாவட்டம், குறிப்பாக விருதுநகர் மாவட்டம்,  அதிமுகவின் இரும்புக்கோட்டை என்பதை நிரூபிக்கும் வகையில் நம்முடைய பணிகள் இருக்க வேண்டும்” என்று பேசினார். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'எப்படி கேமராக்கள் செயலிழக்கும்?'-அதிமுக ஜெயக்குமார் கேள்வி

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
'How can the cameras fail?'- AIADMK Jayakumar asked

மக்களவைத் தேர்தலுக்கான முதல்கட்ட தேர்தல் தமிழகத்தில் முடிந்திருக்கும் நிலையில் அடுத்தடுத்த கட்டங்களாக பல மாநிலங்களில் தேர்தல் நடைபெற்று வருகிறது. இந்தநிலையில் நீலகிரியில் வாக்கு பெட்டிகள் வைக்கப்பட்டிருக்கும் ஸ்ட்ராங் ரூமில் வைக்கப்பட்டிருந்த சிசிடிவி கேமராக்கள் நேற்று திடீரென 20 நிமிடங்கள் செயலிழந்து பின்னர் சரியானது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

அதீத வெப்பம் காரணமாக சிசிடிவி கேமராக்கள் செயலிழந்ததாக நீலகிரி மாவட்ட ஆட்சியர் தரப்பில் விளக்கம் கொடுக்கப்பட்டிருக்கிறது. இந்நிலையில் செய்தியாளர்களைச் சந்தித்த அதிமுகவின் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரிடம் செய்தியாளர்கள் இதுகுறித்து கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அவர், ''சிசிடிவி கேமரா ஃபெயிலியர் ஆகிவிட்டது என்று சொல்கிறார்கள். இதெல்லாம் எலக்சன் கமிஷனுடைய பிரைமரி டியூட்டி. எப்படி சிசிடிவி கேமரா பெயிலியர் ஆகும். ஸ்ட்ராங் ரூமுக்கு உள்ளேயும் வெளியேயும் பொதுவாக சிசிடிவி கேமரா இருக்கும். ஆனால் எப்படி கேமராக்கள் செயலிழந்து. அதற்கான தனியாக யுபிஎஸ் வைத்து பவர் சப்ளை கொடுக்கவில்லையா? இதெல்லாம் எலக்சன் கமிஷன் செய்திருக்க வேண்டும்.

சாதாரணமாக தொழில்நுட்ப பிரச்சனை என்று சொல்லிவிட்டு போகக்கூடாது. அப்படிக் கடந்து செல்லக்கூடாது. ஜனநாயகத்தினுடைய திருவிழா நடத்தப்பட்டு அதன்படி முடிவுகள் அறிவிக்கப்பட இருக்கக்கூடிய இடம் அது. அப்படி இருக்கும் பொழுது அந்தப் பகுதியில் இந்த மாதிரி ஒரு சூழ்நிலை ஏற்பட்டுள்ளது என்று சொல்வது உண்மையிலேயே யாருமே ஏற்றுக்கொள்ள முடியாத விஷயம். தேர்தல் ஆணையம் இதுபோன்ற தவறுகளுக்கு இடம் கொடுக்காமல் விழித்திருந்து முழுமையான பணியை செய்ய வேண்டும். அடுத்தது வாக்குகளை எண்ணப்  போகிறார்கள் அதில் என்ன செய்யப் போகிறார்கள் என்று தெரியவில்லை. அதிலும் சொதப்பாமல் இருந்தால் நல்லது''என்றார்.

Next Story

'அவராலே பாதி தண்ணீர் புதுக்கோட்டைக்கு வராமல் போகிறது'-அமைச்சர் ரகுபதி குற்றச்சாட்டு

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
nn


தமிழ்நாடு முழுவதும் சுட்டெரிக்கும் வெயிலின் தாக்கம் நாளுக்குநாள் அதிகரித்து வரும் நிலையில் அதிமுக, திமுக என அனைத்துக் கட்சிகளும் ஆங்காங்கே தண்ணீர் பந்தல்கள் அமைத்து தாகம் தணித்து வருகின்றனர். அதேபோல், புதுக்கோட்டை திமுக அலுவலகத்தில் திமுக மருத்துவ அணி சார்பில் இன்று ஞாயிற்றுக்கிழமை கோடைகால தண்ணீர் பந்தலை சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, மருத்துவ பணி மாவட்ட செயலாளர் முத்து கருப்பன் ஆகியோர் திறந்து வைத்து பொதுமக்களுக்கு குளிர்பானங்களை வழங்கினார்கள்.

அதன் பிறகு சட்டத்துறை அமைச்சர் ரகுபதி செய்தியாளர்களை சந்தித்த பேசும்போது, ''குஜராத் என்பது போதைப் பொருட்களின் நடமாட்டத்திற்கான மாநிலம். அங்குள்ள துறைமுகத்திற்கு தான் வெளிநாடுகளில் இருந்து இந்தியாவிற்கு போதைப் பொருட்கள் வருகிறது. பிறகு பல மாநிலங்களுக்கு கொண்டு செல்லப்படுகிறது. குஜராத்தில் போதைப் பொருட்களின் நடமாட்டம் அதிகமாக உள்ளது என்பது அதிசயமான செயல் அல்ல.

மத்திய அரசின் நிதி ஒதுக்கீடு யானை பசிக்கு சோலப் பொறி போல என எங்கள் தலைவர் கூறியுள்ளார். அது எந்த அளவு பத்தும் என்பதை நீங்களே யோசித்துக் கொள்ளுங்கள். இருந்த போதிலும் எங்களுக்கு தேவையான நிதியை தரச் சொல்லி வலியுறுத்துவோம். விஜயபாஸ்கர் அதிமுக ஆட்சி காலத்தில் குடிநீர் பிரச்சினைகளில் தீர்வு காணாமல் கோட்டை விட்டுவிட்டார். புதுக்கோட்டைக்கு வரும் காவிரி நீரை வழிமறித்து அவரது கல்லூரிக்கும், அவரது வயலுக்கும் காவிரி நீரை கொண்டு செல்கிறார். வயலுக்கு காவிரித் தண்ணீரை பயன்படுத்தக்கூடிய ஒரே நபர் விஜயபாஸ்கர் மட்டும்தான். இன்னும் ஒரு மணி நேரத்திற்குள் அங்கு சென்றால் அதை பார்க்கலாம். அது குறித்து நடவடிக்கை எடுக்க சென்றால் போராட்டம் நடத்துவார்கள். அவராலே பாதி தண்ணீர் புதுக்கோட்டைக்கு வராமல் போகிறது.ஆனால் இதை அனுமதிக்க முடியாது. விரைவில் குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் அந்த பிரச்சனை குறித்து நடவடிக்கை எடுப்பார்கள்'' என்றார்.

இந்த பேட்டி தொலைக்காட்சிகளில் வெளியான நிலையில், அமைச்சர் ரகுபதி போகிற போக்கில் ஏதேதோ பேசி விட்டு போகிறார். பல வருடமாக குடிநீர் திருட்டு நடப்பதாக இருந்தால் இவர்கள் ஆட்சிக்கு வந்த பிறகு கூட ஏன் தடுக்கவில்லை, நடவடிக்கை எடுக்கவில்லை. ஊராட்சி, பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சிகளில் கூட ஒரு வீட்டிற்கு வரும் தண்ணீரை மோட்டார் வைத்து உறிஞ்சினால் உடனே நடவடிக்கை எடுத்து மோட்டாரை பறிமுதல் செய்து அபராதம் விதிக்கப்படுகிறது. ஆனால் எங்கள் முன்னாள் அமைச்சர் காவிரி கூட்டுக் குடிநீரை தங்கள் கல்லூரிக்கும், தோட்டத்திற்கும் எடுக்கிறார் என்றால் இத்தனை ஆண்டுகளாக ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை. அப்படி இருந்தால் நடவடிக்கை எடுக்க வேண்டியது தானே? தண்ணீர் திருட்டு நடந்தால் அதிகாரிகளை அனுப்பி நடவடிக்கை எடுக்க என்ன தயக்கம்? ஆதாரமற்ற குற்றச்சாட்டை கூறியுள்ளார் என்கின்றனர் அதிமுகவினர்.