ADVERTISEMENT

நாளை மறுநாள் தமிழகம் முழுவதும் கடைகள் அடைப்பு!

02:14 PM Mar 20, 2020 | santhoshb@nakk…

இந்தியாவில் கரோனாவுக்கு நான்கு பேர் உயிரிழந்துள்ள நிலையில், பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 206 ஆக அதிகரித்துள்ளது. கரோனாவை தடுக்க மத்திய, மாநில அரசுகள் தொடர்ந்து பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுத்து வருகின்றன.

ADVERTISEMENT

இந்த நிலையில் பிரதமர் நரேந்திர மோடியின் சுய ஊரடங்கு அறிவிப்பை ஏற்று நாளை மறுநாள் மட்டும் தமிழகம் முழுவதும் கடைகள், ஓட்டல்கள் அடைக்கப்படும் என்று அச்சங்கத்தின் தலைவர் விக்கிரமராஜா தெரிவித்துள்ளனர்.

ADVERTISEMENT

அதேபோல் சேலம் மாவட்டத்தில் உள்ள தங்கம், வெள்ளி நகைக்கடைகள் இன்று முதல் மூன்று நாட்களுக்கு அடைக்கப்படுவதாக சேலம் மாநகர தங்கம், வெள்ளி வைர வியாபாரிகள் சங்கத்தினர் அறிவித்துள்ளனர்.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT