ADVERTISEMENT

பாய்லர் வெடித்த விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு, வேலைவாய்ப்பு - என்.எல்.சி நிர்வாகம் அறிவிப்பு!

09:20 PM May 10, 2020 | Anonymous (not verified)

ADVERTISEMENT

ADVERTISEMENT

கடலூர் மாவட்டம் நெய்வேலியில் இயங்கி வரும் என்.எல்.சி நிறுவனத்தில், கடந்த வியாழக்கிழமை (07.05.2020) மாலை, இரண்டாவது அனல் மின் நிலையத்தின் அலகு 6- இல் நிலக்கரி எரியூட்டும் கொள்கலன் எனப்படும் பாய்லர் வெடித்ததில் நிரந்தர, இன்கோசர்வ் மற்றும் ஒப்பந்தத் தொழிலாளர்கள் உட்பட 8 பேர் படுகாயம் அடைந்தனர்.


இதில் நிரந்தர ஊழியர் சர்புதீன் (53) என்பவர் திருச்சி தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி 8-ஆம் தேதி உயிரிழந்தார். இன்று மேலும் ஒரு பணியாளர் உயிரிழந்துள்ளார். இந்த இரண்டு தொழிலாளர்களின் குடும்பத்திற்கு நிவாரணம் வழங்கக் கோரி என்.எல்.சி 2 ஆவது அனல்மின் நிலையத்தை முற்றுகையிட்டு தொழிலாளர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் பாய்லர் வெடித்த விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு, வேலைவாய்ப்பு வழங்கப்படும் என்று என்.எல்.சி நிர்வாகம் அறிவித்துள்ளது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT