ADVERTISEMENT

கடலூர் பட்டாசு வெடிவிபத்து... உயிரிழப்பு 4 ஆக உயர்வு!

07:34 AM Jun 24, 2022 | kalaimohan

ADVERTISEMENT

ADVERTISEMENT

கடலூரில் வானவேடிக்கை பட்டாசு தயாரிக்கும் கொட்டகையில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் உயிரிழப்பு எண்ணிக்கை 4 ஆக அதிகரித்துள்ளது.

கடலூர் மாவட்டம் எம்.புதூரில் உள்ள வானவேடிக்கை பட்டாசு தயாரிக்கும் கொட்டகையில் நேற்று ஏற்பட்ட விபத்தில் ஐந்து பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டனர். இந்த விபத்தில் சத்யராஜ், அம்பிகா, சித்ரா என மொத்தம் 3 பேர் உயிரிழந்த நிலையில் இந்த விபத்தில் உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரித்துள்ளது. விபத்தில் இருந்து மீட்கப்பட்டு சிகிச்சைபெற்றுவந்த வசந்தா என்பவர் உயிரிழந்துள்ளதால் உயிரிழப்பு எண்ணிக்கை 4 ஆக அதிகரித்துள்ளது.

இந்த தீவிபத்து சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். உயிரிழந்தோரின் குடும்பத்திற்கும் தலா 3 லட்சம் ரூபாய் நிவாரண நிதியாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு அதிமுகவின் ஓபிஎஸ், பாமகவின் ராமதாஸ் ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT