முதல் திருமண வழக்கு நிலுவையில் உள்ள நிலையில் ஒரு வருடத்திற்கு முன்பு உறவினர்கள் சம்மதத்துடன் வைரிவயல் கிராமத்தைச் சேர்ந்த சென்பகவள்ளி (எ) கிருத்திகாவை முறைப்படி தாலி கட்டாமல் தன் வீட்டிற்கு அழைத்து வந்து கணவன் மனைவியாக வாழ்ந்து வருகின்றனர். இவர்களுக்கு கடந்த 35 நாட்களுக்கு முன்பு அழகான ஆண் குழந்தை பிறந்துள்ளது.
கடந்த வெள்ளிக்கிழமை மாலை 4 மணிக்கு படுக்கையில் கிடந்த குழந்தையை காணவில்லை என்று கத்தி கதறி கூச்சல் போட்ட நிலையில், அக்கம்பக்கத்தினர் ஓடி வந்து தேடியபோது மாடி வீட்டின் மேல் உள்ள மூடி இருந்த தண்ணீர்த் தொட்டியை திறந்து பார்த்து குழந்தையை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் குழந்தை இறந்துவிட்டது என்று தெரிந்ததும் வீட்டிற்கு கொண்டுவந்தனர். தகவலறிந்து கே.புதுப்பட்டி போலீசார் குழந்தையின் உடலை மீட்டு விசாரணை செய்தனர்.
வெள்ளிக்கிழமை என் மாமனார் மாமியார் இருவரும் அவங்க மகள் வீட்டுக்கு போனதும் குழந்தை கழுத்தை நெரித்துக் கொன்றுவிட்டு பிறகு நான் தண்ணீர் தொட்டியில் தூக்கிப் போட்டுவிட்டு குழந்தையை காணவில்லை என்று கதறினோம். இதில் மோகனின் முதல் மனைவியின் குடும்பத்தினர் தான் குழந்தையை கடத்திவிட்டதாக போகும் என்று நினைத்தோம். ஆனால் நாங்களே தண்ணீர் தொட்டியில் இருந்து குழந்தை உடலை எடுத்தது அனைவருக்கும் சந்தேகம் வந்துவிட்டது என்று கூறியுள்ளார்.
இந்த வாக்குமூலத்தையடுத்து குழந்தையின் தாய் மற்றும் தந்தையை போலீசார் கைது செய்துள்ளனர். பெற்ற குழந்தையை கொல்லும் அளவுக்கு கொடூர எண்ணம் கொண்ட பெற்றோரை உறவினர்களே வசைபாடி வருகின்றனர்.