Skip to main content

கல்லூரி மாணவி கழுத்தறுத்துக் கொலை!

Published on 28/04/2021 | Edited on 28/04/2021

 

college student incident police investigation

 

புதுக்கோட்டை நகரில் கொலை, கொள்ளை சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே போகிறது. இந்நிலையில், புதுக்கோட்டை பொன்நகரில் நேற்று (27/04/2021) நடந்த சம்பவம் மக்களைப் பதைபதைக்க வைத்துள்ளது.

 

புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி சாலை அசோக் நகர் அருகில் உள்ளது பொன்நகர். இப்பகுதியைச் சேர்ந்தவர் மின்வாரிய ஊழியரான பழனியப்பன். இவரது மனைவி சிவகாமி. இவர்களது மகள் லோகபிரியா (வயது 20), கல்லூரி மாணவி. மின்வாரிய ஊழியரான பழனியப்பன், கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டதால், அவரது மனைவி சிவகாமிக்கு அதே மின்வாரியத்தில் அலுவலக உதவியாளர் பணி வழங்கப்பட்டது.

 

college student incident police investigation

 

வழக்கம்போல சிவகாமி வேலைக்குச் சென்றுவிட்டு இரவு வீடு திரும்புவார். செவ்வாய்க்கிழமையும் வேலைக்குச் சென்றுவிட்ட நிலையில், லோகபிரியா மட்டும் வீட்டில் இருந்துள்ளார். வேலை முடிந்து அன்று மாலை சிவகாமி வீடு திரும்பியபோது அவர் பார்த்தது அவரை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. அதாவது வீட்டுக் கதவு உடைக்கப்பட்டு, வீட்டுக்குள் இருந்த லோகபிரியா கழுத்து அறுபட்ட நிலையில் கொலை செய்யப்பட்டு, சடலமாக கிடந்துள்ளார். மகளின் உடலைப் பார்த்து சிவகாமி கதறி அழுததைக் கண்ட அக்கம்பக்கத்தினர் காவல்துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளனர்.

 

சம்பவ இடத்திற்கு வந்த கணேஷ்நகர் காவல்துறையினர், கொலை குறித்து விசாரித்து வருகின்றனர். மேலும், மோப்ப நாய் அர்ச்சுன் வந்து வீட்டைச் சுற்றிவிட்டு திரும்பியது. கை ரேகை நிபுணர்கள் தடயங்களைச் சேகரித்தனர். அப்போது சிவகாமி, வீட்டில் இருந்த சுமார் 50 பவுன் நகைகளையும் ஸ்கூட்டரையும் காணவில்லை என்று கூறினார். தொடர்ந்து சிவகாமி மற்றும் லோகபிரியாவின் காதலரான உறவினரையும் காவல்துறையினர் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை செய்து வருகின்றனர்.

 

college student incident police investigation

 

முதற்கட்ட விசாரணையில், லோகபிரியா மதியம் தனது உறவினரிடம் ஃபோனில் பேசியதும், அப்போது எனது அண்ணன் (பெரியப்பா மகன்) வீட்டுக்குள் வருகிறார், பிறகு பேசுவதாக ஃபோனை வைத்துள்ளார் என்பதும் தெரிய வந்துள்ளது. லோகபிரியா தனது வீட்டுக்கு வந்ததாகச் சொன்ன அவரது அண்ணனைக் காணவில்லை. அதனால் நகைக்காக இந்தக் கொலை நடந்ததா? அல்லது லோகபிரியாவின் காதல் விவகாரம் பிடிக்காமல் கொலை செய்யப்பட்டிருக்கலாமா? என்ற கோணத்தில் காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர். மேலும் காதல் விவகாரத்தால் கொலை செய்தவர், அதனை மறைக்க நகைகளை அள்ளிச் சென்று திசைத் திருப்பும் முயற்சி செய்திருக்கலாமா? என்றும் காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர். 

 

புதுக்கோட்டையில் அடுத்தடுத்து நடக்கும் கொலை, கொள்ளை சம்பவங்கள் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

 மீண்டும் ஒரு வேங்கை வயல் சம்பவம்; அதிர்ச்சி புகார்!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Shock complaint on Yet another Vengaivayal lincident at pudukkottai

புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் ஒன்றியம் வேங்கைவயல் கிராமத்தில் உள்ள குடிநீர் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி தண்ணீரில் மனிதக் கழிவு கலந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. குடிநீரில் மனிதக் கழிவு கலந்த சமூக விரோதிகள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி பல்வேறு அரசியல் கட்சிகள், அமைப்புகள், மனித உரிமை ஆணையம் எனப் பல தரப்பிலிருந்தும் அழுத்தம் கொடுக்கப்பட்டது. இதனையடுத்து சம்பவம் நடைபெற்ற 20ஆவது நாளில் இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி. போலீசாருக்கு மாற்றப்பட்டு சிபிசிஐடி அதிகாரிகள் விசாரணை செய்து வருகின்றனர்.

அந்த வகையில் இந்த விவகாரம் தொடர்பாக குற்றவாளிகளைக் கண்டறிய உண்மை கண்டறியும் சோதனையும், வேங்கைவயல், இறையூர் உள்ளிட்ட கிராமங்களைச் சேர்ந்த 5 சிறுவர்கள் உட்பட 31 பேரிடமும் டி.என்.ஏ. பரிசோதனைகளையும் சி.பி.சி.ஐ.டி. போலீசார் மேற்கொண்டனர். ஒரு காவலர் உட்பட 5 பேரிடம் குரல் மாதிரி பரிசோதனையும் மேற்கொள்ளப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. 

இந்நிலையில், வேங்கைவயல் சம்பவத்தைப் போல், பொதுமக்கள் உபயோகிக்கும் குடிநீரில் மாட்டுச்சாணம் கலக்கப்பட்டுள்ளதாக புகார் எழுந்த சம்பவம் மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வக்கோட்டை அருகே சங்கன்விடுதி ஊராட்சிக்கு உட்பட்ட தெருவில் 100க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன.  

இந்தத் தெருவில், உள்ள 25 பட்டியலின குடும்பங்களும், மாற்று சமூகத்தைச் சேர்ந்த 10 குடும்பங்களும் உபயோகிப்பதற்காக கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு, 10,000லி அளவு கொண்ட குடிநீர் தொட்டி அமைக்கப்பட்டு இயங்கி வருகிறது. இந்த நிலையில், இன்று (25-04-24) காலை இந்தக் குடிநீர் தொட்டியில் இருந்து அசுத்தமான தண்ணீர் வருவதை அங்குள்ள பொதுமக்கள் கவனித்துள்ளனர். அதன் அடிப்படையில், அந்தத் தொட்டியைச் சுத்தம் செய்வதற்காக தொட்டி மேல் ஏறியுள்ளனர். அங்கு சென்று பார்த்த போது, அந்தத் தொட்டியில் மாட்டுச்சாணம் கலந்ததாகக் கூறப்படுகிறது.

இந்தச் சம்பவம் தொடர்பாக, போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அந்தப் புகாரின் பேரில், அங்கு போலீசார், வட்டாட்சியர் உள்ளிட்ட அதிகாரிகள் நேரில் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். குடிநீர் மாதிரி சோதனைக்கு அனுப்பப்பட்ட நிலையில் தற்போது தொட்டி சுத்தம் செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. மேலும், விசாரணை முடியும் வரை டேங்கர் லாரி மூலம் கிராம மக்களுக்கு குடிநீர் வழங்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. 

Next Story

தங்கைக்கு டி.வி, மோதிரம் வழங்க விரும்பிய அண்ணன்; கடைசியில் நேர்ந்த சோகம்!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
incident happened on Brother wanted to give TV, ring to younger sister

உத்திரபிரதேச மாநிலம் பாரபங்கி அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்தவர் சந்திர பிரகாஷ் மிஸ்ரா (35). இவரது மனைவி சாபி. மிஸ்ராவுக்கு திருமணமாகாத தங்கை ஒருவர் இருந்தார்.

இந்த நிலையில், மிஸ்ராவின் தங்கைக்கு வருகிற 26ஆம் தேதி திருமணம் நடைபெற இருந்தது. தன் தங்கையின் திருமணத்திற்காக தங்க மோதிரம், டி.வி உள்ளிட்ட பொருட்களை வழங்க மிஸ்ரா விருப்பப்பட்டார். இந்த முடிவை மிஸ்ரா தனது மனைவி சாபியிடம் தெரிவித்துள்ளார். ஆனால், அதற்கு சாபி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதனால், இவர்கள் இருவருக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. 

இதில் ஆத்திரமடைந்த சாபி, தனது கணவரை பழிவாங்க வேண்டும் என்பதற்காக தனது சகோதர்களை அழைத்ததாகக் கூறப்படுகிறது. அதன் பேரில், அங்கு வந்த அவர்கள், இது குறித்து மிஸ்ராவிடம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். ஆனால், அந்தப் பேச்சுவார்த்தை ஒரு கட்டத்தில் தகராறில் முடிந்துள்ளது. இதில், சாமியின் சகோதரர்கள், மிஸ்ராவை கம்பு உள்ளிட்ட ஆயுதங்களால் கடுமையாகத் தாக்கியுள்ளனர். இதில் மிஸ்ரா படுகாயமடைந்ததால் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால், அங்கு அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். 

இதனையடுத்து, இந்தச் சம்பவம் குறித்து தகவல் அறிந்து விரைந்து வந்த போலீசார், வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். மேலும் மிஸ்ராவை கொலை செய்த மனைவி சாபி உள்ளிட்ட 5 பேரை கைது செய்து  விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.