Skip to main content

குடும்பத்தை காப்பாற்றுமாறு காஷ்மீரில் இருந்து சிஆர்பிஎப் வீரர் வாட்ஸ்அப் வீடியோவில் உருக்கமான பேச்சு!

Published on 06/03/2019 | Edited on 06/03/2019


''நாட்டைக் காப்பாற்ற 2000 அடி உயரத்தில் பணியில் இருக்கிறேன். நிலப்பிரச்னையில் சிக்கித் தவிக்கும் என் குடும்பத்தைக் காப்பாற்றுங்கள்,'' என்று சேலத்தைச் சேர்ந்த சிஆர்பிஎப் வீரர் ஒருவர், காஷ்மீர் எல்லையில் இருந்து வாட்ஸ்அப் மூலம் உருக்கமான காணொளி பதிவை அனுப்பி உள்ளார். 

 CRPF solider from Kashmir to send watsapp video help to save the family


சேலம் மாவட்டம் மேச்சேரி அருகே உள்ள அமரம் கிராமத்தைச் சேர்ந்தவர் அன்பழகன் (39). ஜம்மு-காஷ்மீரில் மத்திய பாதுகாப்புப்படை வீரராக (சிஆர்பிஎப்) கடந்த 19 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். இவர், வாட்ஸ்அப் மூலமாக ஒரு காணொலி பதிவை அனுப்பி உள்ளார். 

 


அதில் அவர், தனது நிலத்தை வீடு அருகே உள்ள சிலர் ஆக்கிரமித்து நடைபாதையை அடைத்து விட்டதாகவும், இதுகுறித்து கேட்ட தனது தாய் மயிலாவை அவர்கள் தாக்கியதாகவும், இதனால் அவர் மனம் உடைந்து தற்கொலைக்கு முயன்று, சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளதாகவும் மிகவும் உருக்கமாக கூறியுள்ளார்.

 


மேலும் அன்பழகன் அந்த காணொளி  பதிவில், ''நான் கடந்த 19 ஆண்டுகளாக நாட்டுக்காக 2000 அடி உயரத்தில் பணியாற்றி வருகிறேன். ஆனால் சொந்த வீட்டில் என் தாய் நிம்மதியாக இருக்க முடியவில்லை. இதுகுறித்து மேச்சேரி காவல்நிலையம், எஸ்பி அலுவலகம், டிஜிபி அலுவலகம் ஆகிய இடங்களில் புகார் கொடுத்துவிட்டேன். இதுவரை யாரும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே இந்த காணொளி  பதிவை எல்லோருக்கும் பகிர்ந்து, என் குடும்பத்தைக் காப்பாற்றுங்கள்,'' என்று தெரிவித்துள்ளார்.

 

 CRPF solider from Kashmir to send watsapp video help to save the family


புல்வாமா தாக்குதலில் 40 வீரர்கள் பலி, பாக் ராணுவத்திடம் இந்திய விமானி அபிநந்தன் கைது போன்ற பதற்றமான சூழ்நிலைகளில் சிஆர்பிஎப் வீரர் அன்பழகனின் காணொளி  பதிவு மேலும் பரபரப்பையும் உருக்கத்தையும் ஏற்படுத்தி உள்ளது. 


இந்த காணொலி காட்சி, சேலம் மாவட்ட எஸ்பி தீபா கனிக்கர் கவனத்திற்குச் சென்றது. உடனடியாக அவர், காவல்துறை அதிகாரிகளை அமரம் கிராமத்திற்குச் சென்று விசாரணை நடத்த உத்தரவிட்டார். இது தொடர்பான விசாரணை அறிக்கை, எஸ்பி அலுவலகம் மூலமாக மனித உரிமை ஆணையத்திற்கும் அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது.


அந்த அறிக்கையில் கூறியிருப்பதாவது: 


ராணுவ வீரர் அன்பழகனின் தந்தை சின்னராஜூவுக்கும், அவருடைய தம்பி சாமியண்ணனுக்கும் இடையே சொத்து பிரச்னை இருந்து வருகிறது. இது தொடர்பாக நீதிமன்றத்திலும் வழக்கு நடந்து வருகிறது. கடந்த 18ம் தேதி அன்பழகன் சேலம் வந்திருந்தார். அப்போது சாமியண்ணன் தன் நிலத்தில் விவசாயம் செய்வதற்காக அவருடைய பாக நிலத்தை சமன் செய்து கொண்டிருந்தார். சின்னராஜ் குடும்பத்தினர் செல்வதற்கான பாதையையும் ஒதுக்கிக் கொடுத்தார். ஆனால் அந்த நிலத்தின் நடுப்பகுதியில்தான் நடந்து செல்ல பாதை வசதி வேண்டும் என்று அன்பழகன் கேட்டுள்ளார்.

 


இந்த நிலையில்தான் இந்தியா, பாகிஸ்தான் இடையே போர் அபாயம் ஏற்பட்டது. இதனால் காஷ்மீர் சென்றுவிட்டு வந்த பின்னர் பேசி முடிவு செய்து கொள்ளலாம் என்று சென்றுவிட்ட அன்பழகன், அங்கிருந்து வாட்ஸ்அப் மூலம் இப்படி ஒரு காணொளி  காட்சியை அனுப்பி உள்ளார். இதுகுறித்து அன்பழகனின் தாயாரிடம் விசாரித்தபோது, நீதிமன்றம் மூலமாக இந்த விவகாரத்தைத் தீர்த்துக்கொள்வதாக எழுதிக் கொடுத்துவிட்டுச் சென்றுவிட்டார். 


இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.


சிஆர்பிஎப் வீரர் அன்பழகனின் வாட்ஸ்அப் காணொளி  பதிவும், மனித உரிமை ஆணையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது.

 

சார்ந்த செய்திகள்

Next Story

திருமணத்தை மீறிய உறவு; பெண்ணை பெட்ரோல் ஊற்றி எரித்த நடத்துநர்

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Conductor who doused woman with petrol and her in Krishnagiri

கிருஷ்ணகிரியைச் சேர்ந்தவர் திருப்பதி. இவரது மனைவி சிவகாமி(பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவருக்கும் கிருஷ்ணகிரி பாத்திமா நகரைச் சேர்ந்த அரசு பேருந்து நடத்துனர் மாதவன் என்பவருக்கும் கடந்த ஐந்து ஆண்டுகளாக திருமணத்தை மீறிய உறவு இருந்துள்ளது. இந்த நிலையில் மாதவனுக்கு வேறு சில பெண்களுடன் தொடர்பு  இருப்பதாக கருதிய லட்சுமி மாதவன் உடனான உறவை துண்டித்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து மாதவன் சிவகாமிக்கு தொடர்ந்து தொல்லை கொடுத்து வந்துள்ளார். இந்த நிலையில் நேற்று இரவு வீட்டிற்கு வெளியே சென்று லட்சுமியைப் பின் தொடர்ந்து வந்த மாதவன் சிவகாமியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். மேலும் தன்னுடன் பேசுமாறு வற்புறுத்தியுள்ளார். ஆனால்   இதற்குச் சிவகாமி மறுப்பு தெரிவிக்க, ஆத்திரமடைந்த மாதவன் சிவகாமி மீது பெட்ரோலை ஊற்றி உயிரோடு எரித்துள்ளார். பின்னர் வீட்டின் அருகே உள்ள முட்புதிரில் தீயில் கருகி நிலையில் உயிருக்கு போராடி கொண்டிருந்த சிவகாமியைப் பார்த்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக அவரை மீட்டு கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர்.

இந்த நிலையில் இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் சிவகாமிடம் விசாரணை செய்ததில் மேற்கண்ட விவரங்கள் தெரியவந்துள்ளது. இதை அடுத்து மாதவன் மீது வழக்கு பதிவு செய்த போலீசார் அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்

Next Story

தீ விபத்து; பலி எண்ணிக்கை 6 ஆக உயர்வு!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
incident for hotel near Patna Railway Station Bihar

பீகார் மாநிலம் பாட்னா ரயில் நிலையம் அருகே உள்ள ஹோட்டலில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு படை வீரர்கள் தீயை அணைக்கும் பணியிலும், மீட்புப் பணியிலும் ஈடுபட்டனர். இந்த தீ விபத்தில் சிக்கிய 12 பேர் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக முதற்கட்டமாக அனுப்பி வைக்கப்பட்டனர். இச்சம்பவம் பாட்னாவில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருந்தது. இந்த தீ விபத்தில் சிக்கி 3 பேர் உயிரிழந்ததாகவும், 7 பேர் பலத்த காயமடைந்துள்ளனர் என பாட்னா போலீஸ் எஸ்.எஸ்.பி. ராஜீவ் மிஸ்ரா தெரிவித்திருந்தார்.

இது குறித்து பாட்னா தீயணைப்புத் துறை போலீஸ் டிஜி, ஷோபா ஓஹட்கர் கூறுகையில், “தீயணைப்புத் அணைக்கும் மேற்கொண்டோம். இதுபோன்ற நெரிசலான பகுதிகளில் விபத்துகளை தடுக்க தொடர்ந்து சிறப்பு கவனம் செலுத்தி வருகிறோம். இதுபோன்ற சம்பவங்களைத் தடுக்க நாங்கள் தொடர்ந்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறோம். சிலிண்டர் வெடித்ததால் இந்த தீ விபத்து நடந்தது. இருப்பினும் தற்போது தீ முற்றிலும் அணைக்கப்பட்டது” எனத் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் பாட்னா சட்டம் மற்றும் ஒழுங்கு போலீஸ் டிஎஸ்பி கிருஷ்ணா முராரி கூறுகையில், “இந்த தீ விபத்தில் 5 முதல் 6 பேர் வரை இறந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சுமார் 30க்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டுள்ளனர். அதில் பலத்த காயம் அடைந்த 7 பேர் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்” எனத் தெரிவித்தார்.