ADVERTISEMENT
ADVERTISEMENT
சேலம் மாவட்டம், இடைப்பாடி அருகே உள்ள நைனாம்பட்டியைச் சேர்ந்தவர் செந்தில்குமார் (45). கூலித்தொழிலாளி. இவர், பக்கத்து வீட்டைச் சேர்ந்த இரண்டு வயது பெண் குழந்தையிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டார்.
இதுகுறித்து பெற்றோர் அளித்த புகாரின் பேரில் இடைப்பாடி காவல்நிலைய காவல்துறையினர் செந்தில்குமார் மீது போக்சோ வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். இந்த வழக்கு விசாரணை, சேலம் போக்சோ நீதிமன்றத்தில் நடந்து வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி ஜெயந்தி, செந்தில்குமாருக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனையும், 2 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பு அளித்தார்.
Show comments