ADVERTISEMENT

தமிழகத்தில் கரோனா பாதிப்பு 74 ஆக உயர்வு!

11:45 AM Mar 31, 2020 | santhoshb@nakk…

தமிழகத்தில் மேலும் ஏழு பேருக்குக் கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டதாகத் தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இதனால் தமிழகத்தில் கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 67 லிருந்து 74 நாளாக உயர்ந்துள்ளது.

இது தொடர்பாக தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தனது ட்விட்டர் பக்கத்தில், "புதிதாக ஏழு பேருக்குக் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. டெல்லி சென்று திரும்பிய விழுப்புரத்தைச் சேர்ந்த மூன்று பேருக்கும், மதுரையைச் சேர்ந்த இரண்டு பேருக்கும் கரோனா உறுதியானது.

ADVERTISEMENT


ஏற்கனவே கரோனா பாதித்த திருவண்ணாமலை நபருடன் தொடர்பில் இருந்தவருக்கும் கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. திருவனந்தபுரம் சென்று திரும்பிய 43 வயது நபருக்கு உறுதி செய்யப்பட்ட நிலையில் சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்." இவ்வாறு அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

புதிதாக கரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட ஏழு பேரின் உடல்நிலை சீராக உள்ளதாகத் தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 74 ஆக அதிகரித்துள்ளது. இந்த 74 பேரில் ஒருவர் உயிரிழந்த நிலையில், ஆறு பேர் குணமடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT
ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT