கரோனா வைரஸ் 175 நாடுகளுக்கு மேல் பரவி உலக அளவில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. எல்லா நாடுகளிலும் கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இந்தியாவில் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டோர் எண்ணிக்கை 900 கடந்துள்ளது. இந்தியாவில் இதுவரை 86 பேர் கரோனா உறுதி செய்யப்பட்டு குணமடைந்துள்ளனர் என்ற தகவல் கரோனா குறித்து பெரிய அச்சத்தில் இருந்த மக்கள் மத்தியில் பெரிய நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.
ADVERTISEMENT
ADVERTISEMENT
இந்நிலையில் தமிழகத்தில் கரோனாவால் பாதித்த இருவர் குணமடைந்துள்ளனர் என்று சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தகவல் அளித்துள்ளார். கரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்த இருவரும் 14 நாள்கள் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்படுவர் என்றும் அவர் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் இதுவரை 4 பேர் குணமடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Show comments