ADVERTISEMENT
ADVERTISEMENT
கரோனா பரவல் தாக்கம் தொடர்ந்து குறைந்து வந்த நிலையில், நேற்று சென்னையை அடுத்த செங்கல்பட்டில் கரோனா தொற்று எண்ணிக்கை அதிகரித்திருந்தது. இந்நிலையில் தமிழ்நாடு, கேரளா உள்ளிட்ட 5 மாநிலங்களில் கரோனா பரவலை கட்டுப்படுத்த மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி மத்திய சுகாதாரத்துறை கடிதம் வாயிலாக வலியுறுத்தியுள்ளது.
சென்னை மற்றும் செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களில் கரோனா தொற்று எண்ணிக்கை அதிகரித்து வருவதைச் சுட்டிக்காட்டி மத்திய சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஷ் பூஷன் தமிழ்நாடு, கேரளா உள்ளிட்ட 5 மாநில அரசுகளுக்கு கடிதம் எழுதியுள்ளார். கரோனாவை கட்டுப்படுத்த மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அக்கடிதத்தில் அவர் வலியுறுத்தி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
Show comments