ADVERTISEMENT

தமிழகத்தில் ஒரே நாளில் 11 ஆயிரத்தை நெருங்கிய கரோனா பாதிப்பு!

06:24 PM Apr 20, 2021 | kalaimohan

ADVERTISEMENT

ADVERTISEMENT

தமிழகத்தில் இரண்டாம் அலை காரணமாக நாளுக்கு நாள் கரோனா பரவல் என்பது அதிகரித்து வருகிறது. இந்நிலையில் தமிழகத்தில் இன்று மேலும் 10,986 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்று சென்னையில் ஒரே நாளில் 3,711 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் கரோனா சிகிச்சையில் உள்ளவர்கள் எண்ணிக்கை 79,804 ஆக அதிகரித்துள்ளது. அதேபோல் 6,250 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் இதுவரை தமிழகத்தில் குணமடைந்து வீடு திரும்பினோர் எண்ணிக்கை 9,20,369 ஆக அதிகரித்துள்ளது.

இன்று வெளியிடப்பட்ட அறிவிப்பின் படி தமிழகத்தில் 48 பேர் கரோனாவிற்கு உயிரிழந்துள்ளனர். அரசு மருத்துவமனைகளில் 22 பேரும், தனியார் மருத்துவமனைகளில் 26 பேரும் கரோனாவிற்கு உயிரிழந்துள்ளனர். இதனால் தமிழகத்தில் கரோனா உயிரிழப்பு மொத்த எண்ணிக்கை என்பது 13,205 ஆக அதிகரித்துள்ளது.

இன்று ஒரே நாளில் செங்கல்பட்டில் 1,029 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. கோவையில் 686 பேருக்கும், திருவள்ளூரில் 508 பேருக்கும், மதுரையில் 366 பேருக்கும், சேலத்தில் 383 பேருக்கும் கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT