ADVERTISEMENT
ADVERTISEMENT
தமிழகத்தில் கடந்த சில மாதங்களாகக் குறைந்திருந்த கரோனா பாதிப்பானது சில நாட்களாக அதிகரித்து வருகிறது. அண்மையில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், பால்வளத்துறை அமைச்சர் நாசர் ஆகியோருக்கு கரோனா தொற்று ஏற்பட்டு சிகிச்சை பெற்ற நிலையில், தமிழக பேரிடர் மீட்புத்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரனுக்கும் கரோனா உறுதியாகி உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
தற்பொழுது அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் விருதுநகரில் உள்ள வீட்டில் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
Show comments