ADVERTISEMENT

மீண்டும் அதிகரித்த கரோனா... தமிழகம் உட்பட 6 மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்!

12:16 PM Feb 28, 2021 | kalaimohan

ADVERTISEMENT

ADVERTISEMENT

கடந்த 24 மணி நேரத்தில் மொத்த பாதிப்பில் தமிழகம் உட்பட 6 மாநிலங்களில் இருந்து மட்டும் 863.7% கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

கேரளா, கர்நாடகா, பஞ்சாப், மகாராஷ்டிரா, குஜராத் ஆகிய மாநிலங்களில் கரோனா பாதிப்பு அதிகரித்திருந்த நிலையில் தமிழகத்திலும் கரோனா அதிகரித்திருப்பதாக தகவல்கள் வெளியாகியிருக்கிறது. எனவே கரோனா தடுப்பு நடவடிக்கைகளை கண்காணித்து தீவிரப்படுத்த 6 மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் வழங்கியுள்ளது. குறிப்பிட்ட இந்த மாநிலங்களில் கடந்த 24 மணி நேரத்தில் அதிக பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்று மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT