ADVERTISEMENT
தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவிற்கு ஒரே நாளில் 874 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் 618 பேர் சென்னையை சேர்ந்தவர்கள் என்பது உறுதியாகி உள்ளது. இதனால் தமிழகத்தில் கரோனா உறுதி செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை 20,246 ஆக அதிகரித்துள்ளது.
ADVERTISEMENT
இதுவரை தமிழகத்தில் 12,737 ஆண்கள், 7,504 பெண்கள், 5 திருநங்கைகள் ஆகியோருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டிருக்கிறது. சென்னையில் இதுவரை கரோனா உறுதி செய்யப்பட்டவர் எண்ணிக்கை 13,362 ஆக அதிகரித்துள்ளது. தற்போது தமிழகத்தில் கரோனா பாதிப்பிலிருந்து 765 பேர் ஒரே நாளில் டிஸ்சார்ஜ் ஆகி உள்ளனர். இதனால் குணமடைந்தோர் எண்ணிக்கை 11,313 அதிகரித்துள்ளது. இன்று ஒரே நாளில் 9 பேர் உயிர் இழந்ததால், இதுவரை தமிழகத்தில் கரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 154 அதிகரித்துள்ளது.
ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT