தமிழகத்தில் என்றும் இல்லாத அளவுக்கு இன்று 231 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2,757 ஆக உயர்ந்துள்ளது. மேலும் இன்று ஒருவர் இறந்ததால் கரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை தமிழகத்தில் 29 ஆக அதிகரித்துள்ளது.
இந்நிலையில் இன்று தமிழகத்தில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் பிறந்து 14 நாட்களே ஆன குழந்தைக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. அதேபோல் அரியலூரில் 4 வயது குழந்தைக்கும், பெரம்பலூரில் 6 வயது சிறுவனுக்கு கரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது.
அண்மையில் தென்கொரியாவில் பிறந்து 28 நாட்களே ஆன பெண் குழந்தைக்கு கரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டு எந்தவொரு மருத்துவ சிகிச்சைகளும் இல்லாமல் மருத்துவர்களின் மேற்பார்வையில் தொடர்ந்து மூன்று வாரம் தாய்ப்பால் மட்டும் கொடுக்கப்பட்டு கரோனாவிலிருந்து குழந்தை குணம் அடைந்தது குறிப்பிடத்தக்கது.