சென்னை, திருவல்லிக்கேணி பார்த்தசாரதி சுவாமி கோயிலில் நடைபெற்ற துவக்க விழாவில், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு கலந்துகொண்டு துவக்கிவைத்தார். அதேபோல், மற்ற நான்கு கோயில்களுக்கும் சென்னையில் இருந்தபடியே காணொளி காட்சி வாயிலாக இந்தத் திட்டத்தை அமைச்சர் சேகர்பாபு துவக்கிவைத்தார்.
இந்த நிகழ்ச்சியில், இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் க.வீ.முரளீதரன், பெருநகர சென்னை மாநகராட்சி நிலைக்குழு (பணிகள்) தலைவர் என்.சிற்றரசு மற்றும் உயர் அதிகாரிகள் பங்கேற்றனர்.
மோதல் போக்கு வேண்டாம் என்பதற்காக காவல் நிலையத்தில் புகார் அளித்திருக்கிறோம். கனகசபையில் பக்தர்களை அனுமதிக்காததால் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்து இது குறித்து நீதிபதிகள் முன்பு தெரிவிக்க இந்து சமய அறநிலையத்துறை முடிவு செய்துள்ளது” எனத் தெரிவித்தார்.