Skip to main content

இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் கொண்டுவரப்பட்ட தனியார் பள்ளி! (படங்கள்)

Published on 09/07/2021 | Edited on 09/07/2021

 

சென்னை கீழ்ப்பாக்கத்தில் இயங்கிவந்த சீத்தா கிங்ஸ்டன் பள்ளி, இந்து சமய அறநிலைய துறை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டு, காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் திருக்கோவில் மெட்ரிகுலேஷன் பள்ளி என பெயர் மாற்றப்பட்டு மறுசீமைப்பிற்கு இன்று (09.07.2021) அடிக்கல் நாட்டுவிழா நடைபெற்றது. பூந்தமல்லி சாலையில் காஞ்சிபுரம் அருள்மிகு ஏகாம்பரேஸ்வரர் திருக்கோயிலுக்கு சொந்தமான இடம் சுவாதீனம் பெறப்பட்டு, அங்கிருந்த பள்ளி கோயில் நிர்வாகத்திற்கு மாற்றப்பட்டு, பள்ளி மராமத்துப் பணிகளை மாண்புமிகு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி. கே. சேகர் பாபு பூமி பூஜை செய்து தொடங்கிவைத்தார்.

 

இதில் அமைச்சர் சேகர் பாபு, அறநிலைய துறை ஆணையர் குமரகுரு மற்றும் அதிகாரிகள் கலந்துகொண்டனர். அதனைத் தொடர்ந்து பேசிய அமைச்சர் சேகர் பாபு, “காஞ்சிபுரம் அருள்மிகு ஏகாம்பரநாதர் கோவிலுக்கு சொந்தமான இடத்தில் இயங்கிவந்தது சீதா கிங்ஸ்டன் என்கிற தனியார் பள்ளி. வாடகை அடிப்படையில் இயங்கிவந்த இந்தப் பள்ளியானது டிரஸ்ட்டின் பொருளாதார நெருக்கடி காரணத்தினால் அதனை அரசே ஏற்று நடத்த வேண்டுகோள் விடுத்திருந்தது. இந்தப் பள்ளியின் மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்களைக் கருத்தில்கொண்டு அதனை அரசே சிறப்பாக நடத்த வேண்டும் என முதல்வர் உத்தரவிட்டிருந்தார்.

 

அதனடிப்படையில் இந்தப் பள்ளியில் மராமத்துப் பணிகளை மேற்கொள்வதற்கு 37 லட்சம் ரூபாய் ஒதுக்கி, அதற்கான பணிகளைத் துவங்கியிருக்கிறோம். எங்களுடைய நம்பிக்கையானது, 700 மாணவர்கள் பயிலும் இந்தப் பள்ளியில் வருகிற ஆண்டுகளில் ஆயிரமாக மாற்றும் அளவிற்கு பள்ளியின் தரத்தை உயர்த்துவோம். அதேபோல் எல்.கே.ஜி வகுப்பிற்கு பள்ளி கட்டணம் 10 ஆயிரமாக இருந்ததை 5 ஆயிரமாக குறைத்துள்ளோம். 11ஆம் வகுப்பில் சேருவதற்கு 20 ஆயிரமாக இருந்ததை 10 ஆயிரமாக மாற்றியுள்ளோம். மேலும் இந்தப் பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு இரண்டு செட் சீருடை, எழுது பொருட்கள், நோட் மற்றும் புத்தகம் இலவசமாக வழங்கியுள்ளோம்”. மேலும் இந்தப் பள்ளியை வெகு சிறப்பாக நடத்த அனைவரும் ஒத்துழைப்பு தர வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

சிறுத்தை நடமாட்டம்; தனியார் பள்ளிக்கு விடுமுறை அறிவிப்பு!

Published on 03/04/2024 | Edited on 03/04/2024
Leopard movement; Holiday announcement for private school

சிறுத்தை நடமாட்டம் காரணமாக மயிலாடுதுறையில் உள்ள தனியார் பள்ளிக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

மயிலாடுதுறை மாவட்டம் செம்மங்குளம் பகுதியில் நேற்று (02.04.2024) இரவு 11 மணியளவில் சிறுத்தை நடமாட்டம் இருப்பதாக தகவல் வெளியாகி இருந்தது. அதனைத் தொடர்ந்து சிறுத்தை நடமாட்டம் தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகி மக்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. இது குறித்து மயிலாடுதுறை போலீசார் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

அதனைத் தொடர்ந்து வனத்துறையினர் சிறுத்தையை தீவிரமாக தேடி வருகின்றனர். மேலும் சிறுத்தையை பிடிப்பதற்காக வனத்துறை சார்பில் கோவையில் இருந்து தனிப்படை ஒன்று விரைந்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில் செம்மங்குளம் பகுதியில் உள்ள தனியார் பள்ளிக்கு இன்று (03.04.2024) ஒரு நாள் மட்டும் விடுமுறை அளித்து மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் மகாபாரதி உத்தரவிட்டுள்ளார். 

Next Story

'மோடி உருண்டு புரண்டு என்ன பொய் சொன்னாலும் மக்கள் நம்புவதாக இல்லை'-அமைச்சர் சேகர்பாபு பேட்டி

Published on 01/04/2024 | Edited on 01/04/2024
'Modi rolled over, people did not believe whatever lie  told'- Minister Shekharbabu interview

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கனவே அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. அதே சமயம் தமிழக அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரங்களை தொடங்கியுள்ளன.

திமுக, அதிமுக, நாம் தமிழர், பாஜக கட்சிகள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறது. இந்த தேர்தலில் கச்சத்தீவு விவகாரம் பேசு பொருளாகியுள்ளது. திமுகவும், பாஜகவும் கச்சத்தீவு விவகாரம் தொடர்பாக மாறி மாறி கேள்வி எழுப்பி வருகின்றன. காங்கிரஸ் ஆட்சி காலத்தில் தான் கச்சத்தீவு இலங்கைக்கு தாரைவார்க்கப்பட்டதாகவும், அப்போது முதல்வராக இருந்த கலைஞர் எந்தக் கேள்வி கேட்கவில்லை என பிரதமர் இன்று குற்றச்சாட்டை வைத்திருந்தார்.

'Modi's role is over, people don't believe what they don't' - Minister Shekar Babu in an interview

இந்நிலையில் சென்னையில் தேர்தல் பரப்புரைக்கு மத்தியில் செய்தியாளர்களை சந்தித்த மருத்துவத் துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் இது குறித்த கேள்விக்கு, ''இது சம்பந்தமாக சட்டமன்றத்தில் ஏராளமான முறை அமைச்சர் துரைமுருகன் மிகச் சிறப்பாக சொல்லியிருக்கிறார். கச்சத்தீவு விவகாரம் வரும் போதெல்லாம் தமிழ்நாட்டின் நீர்வளத்துறை அமைச்சராக இருந்த துரைமுருகன், அன்று என்ன நடந்தது; அண்ணா கண்டன கூட்டங்களை நடத்தியது; கலைஞர், இந்திரா காந்தி அம்மையாருக்கு எதிராக நடத்திய போராட்டங்கள்; சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் இது பற்றி நிறைய விஷயங்களை தெரிவித்துள்ளார். ஆனால் இதையெல்லாம் எதையுமே தெரிந்து கொள்ளாமல் ஒரு பிரதமர் இந்த மாதிரி சொல்லி இருக்கிறார் என்பது ஒரு அதிசயமான ஒன்றாக இருக்கிறது. அப்படி இருந்தால் இந்த பத்தாண்டு காலம் கச்சத்தீவு மீட்புக்கு நரேந்திர மோடி என்ன நடவடிக்கை எடுத்தார் என்பதையும் அவர்கள் விலக்கி இருந்தால் நன்றாக இருக்கும்'' என்றார்.

'Modi rolled over, people did not believe whatever lie  told'- Minister Shekharbabu interview

அதேபோல் இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு கச்சத்தீவு தொடர்பான கேள்விக்கு பதிலளித்து பேசுகையில், ''ஒவ்வொரு நாடாளுமன்ற தேர்தலின் போதும் இந்த பிரச்சனையை பாஜக கையில் எடுக்கிறது. நாட்டு மக்கள் உண்மை நிலையை அறிந்ததால் தான் தொடர்ந்து பாஜகவிற்கு தமிழகத்தில் தோல்வியை கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள். பொய்யிலே பிறந்து பொய்யிலே வளர்ந்த புலவர் பெருமானே என்ற வார்த்தை உண்டு. அதற்கு முழுக்க முழுக்க தகுதி படைத்தவர் பிரதமர் மோடி.

கச்சதீவை பொறுத்த அளவில் அன்றைய முதல்வர் கலைஞர் கச்சத்தீவை இலங்கைக்கு ஒப்படைக்கிற சூழல் வருகின்ற பொழுது அது குறித்து முதன் முதலில் அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டினார். அன்றைய முதல்வர் கலைஞர் அறிவித்த  கூட்டத்தில் கூட கலந்து கொள்ளாமல் அதிமுக வெளிநடப்பு செய்தது. அதோடு மட்டுமல்லாமல் கச்சத்தீவு பறிபோய் போய்விடக் கூடாது என்பதற்காக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்வதற்கும், மத்திய அரசுக்கு இந்த கச்சத்தீவை ஒப்படைக்க கூடாது என முதன் முதலில் குரல் எழுப்பியவர் கலைஞர். ஆகவே மோடி உருண்டு புரண்டு பொய் சொன்னாலும் சரி, தண்ணீருக்குள் போய் பொய் சொன்னாலும் சரி, பறந்து வந்து பொய் சொன்னாலும் சரி தமிழக மக்கள் நம்புவதாக இல்லை'' என்றார்.