ADVERTISEMENT

சிக்கிய கண்டெய்னர்... பரபரப்பில் தஞ்சை!

10:54 AM Mar 04, 2021 | kalaimohan

ADVERTISEMENT

ADVERTISEMENT

தமிழகத்தில் 2021 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு, தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளது. அரசியல் கட்சிகளும் கூட்டணி, தொகுதிப் பங்கீடு, வேட்பாளர் நேர்காணல் என தீவிரமாக இயங்கி வருகின்றன. இந்நிலையில் திமுக கூட்டணியில், திமுகவுக்கும் அதன் கூட்டணிக் கட்சிகளுக்குமான தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இது ஒருபக்கம் இருக்க, மறுபக்கம் தேர்தல் நடத்தை வழிமுறைகள் அமலில் இருப்பதால், தேர்தல் பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில், தஞ்சை பழைய கலெக்டர் அலுவலகம் முன்பு வெகு நேரமாக நின்றிருந்த கண்டெய்னர் லாரியைத் தேர்தல் பறக்கும் படையினர் சோதனையிட்டதில், 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட, முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா படம் பொறித்த, பள்ளிப் பைகள் இருப்பது தெரியவந்தது. தற்போது அதனைத் தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்துள்ளனர். இதன் தொடர்ச்சியாக, அருகிலுள்ள பல்வேறு இடங்களில் மேலும் வாகன சோதனையைத் தீவிரப்படுத்தியுள்ளது தேர்தல் பறக்கும் படை.

கடந்த 2016-ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில், 5 கண்டெய்னர்களில் பணம் கைப்பற்றப்பட்ட நிலையில், தஞ்சையில் அதிக பணம் கையகப்படுத்தப்பட்ட காரணத்தால் தேர்தலே நிறுத்திவைக்கப்பட்டு, பின்பு இடைத்தேர்தலில் திமுக வென்றது. இந்நிலையில் கண்டெய்னர் சோதனை என்பது இந்தத் தேர்தலில் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கிறது. கைப்பற்றப்பட்ட கண்டெய்னர் பெரியது என்பதால், உள்ளே வேறேதேனும் பொருட்கள் உள்ளதா, கொண்டுவரப்பட்ட பைகளுக்குச் சரியான ஆவணம் உள்ளதா எனவும் விசாரணை நடைபெற்று வருகிறது. இந்தச் சம்பவம் தஞ்சையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT