ADVERTISEMENT
ADVERTISEMENT
காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான ப. சிதம்பரம் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில், "மாநில அரசுகளின் தடுப்பூசி டெண்டர்களுக்கு உற்பத்தியாளர்கள் கையை விரிக்கிறார்கள். தனியார் கம்பெனிகள் நாங்கள் தடுப்பூசிகளைப் பெற்று எங்கள் ஊழியர்களுக்குத் தடுப்பூசி போடப்போகிறோம் என்கிறார்கள். மகிழ்ச்சி, பாராட்டுக்கள். தடுப்பூசிகள், மாநில அரசுகளுக்குக் கிடைக்கவில்லை, ஆனால் தனியார் கம்பெனிகளுக்குக் கிடைக்கிறது. அது எப்படி?" என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
Show comments