Skip to main content

"அதிசயம் ஆனால் உண்மை"- ப.சிதம்பரம் கடும் விமர்சனம்!

Published on 16/05/2021 | Edited on 16/05/2021

 

 

former union minister chidambaram tweets coronavirus vaccines

 

இந்தியாவில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்தும் வரும், கரோனா நடவடிக்கைகள், கரோனா தடுப்பூசிப் போடும் பணிகளை மத்திய, மற்றும் மாநில அரசுகள் முடுக்கிவிட்டுள்ளனர். 

 

இந்த நிலையில், அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான ப.சிதம்பரம் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில், "அதிசயம் ஆனால் உண்மை. இவையெல்லாம் அரசு செய்யத் தவறியவை. நான்கு கட்டமாக 102 கோடி மக்களுக்கு தடுப்பூசி போடுவதற்கு ஒவ்வொரு கட்டத்திலும் எவ்வளவு தடுப்பூசி தேவைப்படும் என்ற எளிய கணக்கை மத்திய அரசு போடத் தவறியது. இரண்டு இந்திய கம்பெனிகள் ஒரு மாதத்தில் எத்தனை தடுப்பூசிகளைத் தயாரிக்க முடியும் என்று கணிக்கத் தவறியது.

 

former union minister chidambaram tweets coronavirus vaccines

 

இரண்டு இந்தியக் கம்பெனிகளுக்கும் தடுப்பூசி தயாரித்துத் தர மத்திய அரசு ஆர்டர் தந்த நாள் 11/01/2021. அவர்கள் தங்கள் முயற்சியில் தயாரித்திருந்தத் தடுப்பூசி இருப்பிலிருந்து தந்தார்கள். அவர்கள் உற்பத்தியைப் பெருக்குவதற்கு மத்திய அரசு எந்த ஊக்கமும் தரத் தவறியது.

 

இரண்டு கம்பெனிகளுமே மானியமோ முதலீடோ கடனோ எதிர்பார்த்தார்கள். தடுப்பூசி சப்ளைக்கு மத்திய அரசு முன்பணம் (அட்வான்ஸ்) தந்ததே அன்றி வேறு பணம் தரத் தவறியது. இந்தியாவில் தயாரிக்கப்பட்ட தடுப்பூசிகளை ஏற்றுமதி செய்வதற்குத் தடை விதிக்கத் தவறியது. 29/03/2021 அன்று தான் தடை செய்யப்பட்டது. அதற்குள் 5.8 கோடி தடுப்பூசிகள் ஏற்றுமதி செய்யப்பட்டன.

 

former union minister chidambaram tweets coronavirus vaccines

 

மூன்றாவது தடுப்பூசிக்கு (ஸ்புட்னிக்) 12/04/2021 அன்று தான் பயன்பாட்டு அனுமதி தரப்பட்டது. வேறு எந்தத் தடுப்பூசிக்கும் இதுவரை பயன்பாட்டு அனுமதி தரப்படவில்லை, இறக்குமதியும் ஆகவில்லை." இவ்வாறு அவர் ட்விட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.


 

சார்ந்த செய்திகள்

Next Story

"கடைசியில் ஒரே கட்சி ஒரே தலைவர் என்பதில் போய் முடியும்" - ப. சிதம்பரம் விளாசல்

Published on 16/06/2023 | Edited on 16/06/2023

 

former union minister chidambaram says one party one leader and condemn bjp 

 

திமுகவின் முன்னாள் தலைவரும் தமிழக முன்னாள் முதல்வருமான கலைஞரின் நூற்றாண்டு விழா ஜூன் மாதம் 3 ஆம் தேதி முதல் தமிழக அரசு சார்பிலும் திமுக சார்பிலும் வெகு விமரிசையாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. இது தொடர்பாக பல்வேறு முன்னெடுப்புகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

 

அந்த வகையில் கலைஞர் 100 நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக 'உழைப்பு தந்த உயிர்ப்பு; ஒன்றியம் கண்ட வியப்பு' என்ற தலைப்பின் கீழ் பொதுக்கூட்டம், சென்னை கிழக்கு மாவட்ட திமுக சார்பில் வில்லிவாக்கம் கிழக்கு பகுதி அயனாவரம் ஜாயிண்ட் ஆபீஸ் அருகில் நடைபெற்றது. இதில் முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரம் எம்.பி,  சி.பி.எம் கட்சியின் மாநிலக் குழு உறுப்பினர் தோழர் கே. பாலபாரதி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் ஆளுர் ஷாநவாஸ் எம்.எல்.ஏ ஆகியோர் பங்கேற்று உரையாற்றினர்.

 

இந்த பொதுக்கூட்டத்தில் முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரம் பேசுகையில், "எந்த துறையாக இருந்தாலும் முதல் வரிசையில் கலைஞர் இருப்பார். அத்தகைய சிறப்பு வாய்ந்த மாமனிதருடைய நூற்றாண்டு விழாவை இந்த ஆண்டு முழுவதும் கொண்டாட உள்ளோம். இந்திய அரசியல் சாசனத்தைப் படித்தவர்கள் இந்தியாவை இந்திய யூனியன் என்று சொன்னார்கள். மத்திய அரசுக்கு மாநில அரசு குறைந்த அரசு அல்ல. அதுமட்டுமின்றி சளைத்த அரசும் அல்ல.

 

குறிப்பாக பாஜக கட்சி ஆளாத மாநிலங்களோடு அவர்கள் மோதிக் கொண்டே இருந்தால் அந்த மாநிலத்தின் திட்டங்களை எப்படி செயல்படுத்த முடியும். மாநிலத்தின் உரிமைகள் மறுக்கப்படுகின்றன. பிரதமர் நரேந்திர மோடி பதவியேற்ற பிறகு கடந்த 9 ஆண்டுகளாக தென் மாநிலங்கள் அதிகமாக வஞ்சிக்கப்படுகின்றன. மாநிலங்களை மோடி மதிப்பது கிடையாது. மாநில உரிமைகளையும் மதிப்பது இல்லை.  ஒரே நாடு ஒரே மொழி என பாஜகவினர் சொல்வது கடைசியில் ஒரே கட்சி ஒரே தலைவர் நரேந்திர மோடி என்பதில் போய் முடியும். இன்னும் 300 நாட்களில் நாடாளுமன்றத் தேர்தல் வரும். அதற்குப் பிறகும் இந்த நிலைமை நீடிக்க வேண்டுமா இல்லையா என்பதை மக்கள் தான் தீர்மானிக்க வேண்டும்" எனப் பேசினார். 

 

 

Next Story

"கவலைப்படவில்லையா...?” - அமித்ஷாவுக்கு கபில் சிபல் கேள்வி

Published on 09/06/2023 | Edited on 09/06/2023

 

are you not worried kapil sibal question to amit shah

 

கொலைக் குற்றங்கள் அதிகரித்து வருவது குறித்து கவலைப்படவில்லையா என அமித்ஷாவுக்கு கபில் சிபல் கேள்வி எழுப்பி உள்ளார்.

 

பிரபல ரவுடி  சஞ்சீவ் ஜீவா விசாரணைக்காக உத்தரப் பிரதேச மாநிலம் லக்னோ நீதிமன்றத்திற்கு நேற்று முன்தினம்  (07.06.2023) அழைத்து வரப்பட்டார் அப்போது அங்கு இருந்த மர்ம கும்பலால் சஞ்சீவ் ஜீவா சுட்டுக் கொல்லப்பட்டார். நீதிமன்ற வளாகத்தின் உள்ளே நிகழ்ந்த இந்தச் சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. மேலும் உத்தரப் பிரதேசத்தில் தொடர்ந்து ரவுடிகள் கொலை செய்யப்பட்டு வரும் சம்பவம் அதிகரித்து உள்ளது.

 

இந்நிலையில் முன்னாள் மத்திய அமைச்சரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கபில் சிபல் ட்விட்டரில், "கடந்த 2017 முதல் 2022 ஆம் ஆண்டு வரை உத்திரப் பிரதேச மாநில போலீஸ் காவலில் இருந்த 41 பேர் கொல்லப்பட்டனர். சமீபத்தில் போலீஸ் காவலில் இருந்த சஞ்சீவ் ஜீவா லக்னோ நீதிமன்றத்தில் சுட்டுக் கொல்லப்பட்டார். போலீஸ் காவலில் இருந்தபோது அத்திக் மற்றும் அஷ்ரப் ஆகியோர் சுட்டுக் கொல்லப்பட்டனர். திகாரில் துல்லு தாஜ் பூரியா சுட்டுக் கொல்லப்பட்டார். ஏன், எப்படி இந்த சம்பவங்கள் நடைபெறுகின்றன. அமித்ஷா அவர்களே நீங்கள் இது பற்றி கவலைப்படவில்லையா. இது குறித்து நாங்கள் கவலைப்படுகிறோம்" என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு கேள்வி எழுப்பி உள்ளார்.