ADVERTISEMENT

பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட காங்கிரஸ் கட்சியினர்..! (படங்கள்)

11:44 AM Jun 11, 2021 | lakshmanan@nak…

ADVERTISEMENT

கடந்த சில தினங்களாக பெட்ரோல், டீசலின் விலை அதிகரித்துவருகிறது. இந்நிலையில், இன்று (11.06.2021) சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 25 காசுகள் அதிகரித்து, 97 ரூபாய் 19 காசுகளாக விற்பனையாகிறது. அதேபோல் டீசலின் விலை லிட்டருக்கு 27 காசுகள் உயர்ந்து 91 ரூபாய் 42 காசுகளுக்கு விற்பனை செய்யப்படுகிறது.

ADVERTISEMENT

ஏற்கனவே நாட்டின் சில பகுதிகளில் பெட்ரோல் விலை 100 ரூபாயைக் கடந்திருக்கும் நிலையில், தமிழ்நாட்டிலும் அதே நிலையை நோக்கி நகர்ந்துவருவது வாகன ஓட்டிகள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்து தமிழ்நாடு உட்பட நாடு முழுவதும் பல இடங்களில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம் மேற்கொண்டுவருகின்றனர்.

அதேபோல் இன்று (11.06.2021) தென்சென்னை மாவட்ட தமிழக காங்கிரஸ் கமிட்டி சார்பில் பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்து முன்னாள் தலைவர் கே.வி. தங்கபாலு, தென்சென்னை மாவட்டத் தலைவர் டி. துரை ஆகியோர் தலைமையில் அடையாறு இந்தியன் ஆயில் பெட்ரோல் நிலையம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT