ADVERTISEMENT
ADVERTISEMENT
காங்கிரஸ் கட்சியின் முன்னாள் வடசென்னை மாவட்ட தலைவராக இருந்தவர் ராயபுரம் மனோகர். இவர் காங்கிரஸ் கட்சியில் இருந்து கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு விலகினார். அதன்பின் எந்தவித அரசியல் நடவடிக்கையிலும் ஈடுபடாமல் ஒதுங்கியிருந்தார். இளைஞர்கள் பயன்பெறும் வகையில் தன்னம்பிக்கை வளர்க்கும் ஒரு மையத்தை இலவசமாக நடத்தி வந்தார். இந்த நிலையில் இன்று (29/11/2020) காலை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியை தனது ஆதரவாளர்களோடு சந்தித்து அ.தி.மு.க.வில் தன்னை இணைத்துக் கொண்டார்.
அடுத்தாண்டு தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் ராயபுரம் மனோகர் அ.தி.மு.க.வில் இணைந்தது காங்கிரஸ் கட்சிக்கு பின்னடைவாக பார்க்கப்படுகிறது.
Show comments