ADVERTISEMENT

விமானப்படைக்கும், மோடிக்கும் நன்றிகளும், வாழ்த்துக்களும்: விஜயகாந்த்

02:29 PM Feb 26, 2019 | rajavel

ADVERTISEMENT

தேமுதிக தலைவர் விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

ADVERTISEMENT

பாக்கிஸ்தான் நாட்டிற்கு பதிலடி தரும் வகையில் இந்திய விமானப்படை தாக்குதல் நடத்தியது பாராட்டுக்குரியது. சரியான நேரத்தில் தக்க பதிலடி கொடுத்த இந்திய விமானப்படைக்கும், மத்திய அரசுக்கும், பாரத பிரதமர் நரேந்திரமோடிக்கும் தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் சார்பாக எனது நன்றிகளையும், வாழ்த்துக்களையும் இந்த நேரத்தில் தெரிவித்துக்கொள்கிறோம்.


முன்பு பாக்கிஸ்தான் நாட்டை சேர்ந்த தீவிரவாதிகள் தாக்குதல் நடத்திய தருணத்தில், நமது நாட்டை பாதுகாப்பதற்கு தன் உயிரை தியாகம் செய்த இந்திய ராணுவ வீரர்கள் குடும்பத்தை சேர்ந்தவர்களுக்கு, இந்த பதிலடி தாக்குதல் மிகப்பெரிய ஒரு ஆறுதலாக இருக்கும். இந்திய ராணுவம் யாருக்கும் குறைந்தது அல்ல என்பதை நிரூபிக்கும் வண்ணம் இன்றைய பதிலடி தாக்குதலில் ஈடுபட்ட இந்திய விமானப்படையை சேர்ந்த அனைவருக்கும் தேமுதிக சார்பாக எனது வாழ்த்துகளை தெரிவித்துகொள்கிறேன். இவ்வாறு கூறியுள்ளார்.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT