ADVERTISEMENT

ஆசிரியர்களிடையே சாதி மோதல்; சங்கங்களை தடை செய்ய வலியுறுத்தி போராட்டம்!       

10:32 AM Mar 03, 2023 | ArunPrakash

ADVERTISEMENT

கோப்புக்காட்சி

ADVERTISEMENT

கல்லூரி ஆசிரியர்களிடையே அதிகரித்து வரும் சாதி மோதல்களையும் சாதி ரீதியான சங்கங்களையும் தடை செய்யக்கோரி கல்லூரி ஆசிரியர் சங்கத்தினர் கடந்த புதன்கிழமை (மார்ச் 01, 2023) வாயில் முழக்கப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தமிழ்நாடு கல்லூரி ஆசிரியர்கள் சங்க செயலாளர் வெங்கட்ராமலிங்கம் தலைமையில், சேலம் அரசு கலைக்கல்லூரி முன்பு இந்தப் போராட்டம் நடந்தது. போராட்டத்தின்போது, அரசுக்கல்லூரி வளாகங்களில் ஆசிரியர்களுக்கு இடையே உள்ள சாதி ரீதியான மோதல்களைக் களைய வேண்டும்; கல்லூரி ஆசிரியர்களிடையே உருவாகியுள்ள சாதி சங்கங்களை உடனடியாக அரசு தடை செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர். இதில் சங்க செயற்குழு உறுப்பினர்கள் பலரும் கலந்து கொண்டனர். சேலம் அரசு மகளிர் கலைக்கல்லூரி முன்பும் இக்கோரிக்கைகளை வலியுறுத்தி வாயில் முழக்கப் போராட்டம் நடந்தது.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT