ADVERTISEMENT

கல்லூரி செமஸ்டர் தேர்வுகள் ரத்து - முதல்வர் உத்தரவு!

09:55 AM Jul 23, 2020 | suthakar@nakkh…

ADVERTISEMENT

ADVERTISEMENT

உலகம் முழுவதும் கரோனா பாதிப்பு உச்சத்தில் இருந்து வருகிறது. இதுவரை ஒரு கோடிக்கும் அதிகமானவர்களை இந்த நோய்த் தாக்கியுள்ளது. 6 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் இந்த நோயினால் உயிரிழந்துள்ளனர்.


உலகின் பல நாடுகளுக்கு கரோனா வைரஸ் பரவியுள்ள நிலையில், இதனைத் தங்களது நாட்டில் பரவாமல் தடுக்க உலக நாடுகள் பலவும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. பல நாடுகள் தங்கள் நாடுகளில் ஊரடங்கு உத்தரவை அமல்படுத்தியுள்ளன. மராட்டியத்திற்கு அடுத்ததாக தமிழகத்தில் கரோனா தொற்று அதிக அளவு இருந்து வருகிறது. தமிழகத்தில் இதுவரை கரோனா உறுதி செய்யப்பட்டோர் எண்ணிக்கை 1.7 லட்சத்தைக் கடந்துள்ளது. 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் பலியாகி உள்ளார்கள்.

மாவட்டங்களிலும் கரோனா தொற்று வேகமாக அதிகிரித்து வருகின்றது. இந்நிலையில் தமிழகத்தில் கல்லூரி தேர்வுகள் அனைத்தும் ரத்து செய்யப்படுவதாக முதல்வர் அறிவித்துள்ளார். இறுதி ஆண்டு மாணவர்களைத் தவிர மற்ற அனைத்து மாணவர்களும் அடுத்த கல்வியாண்டிற்கு இதன் மூலம் செல்லலாம் என்பது தற்போது உறுதியாகியுள்ளது. இறுதி ஆண்டு படிக்கும் மாணவர்களுக்கு என்ன வழிமுறை கடைப்பிடிக்கப்படும் என்பதைக் கல்வித்துறை விரைவில் அறிவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT