Skip to main content

5 மற்றும் 8ஆம் வகுப்புக்கு பொது தேர்வை ரத்து செய்ய வேண்டும்! தமிமுன் அன்சாரி

Published on 14/09/2019 | Edited on 14/09/2019

 

5 மற்றும் 8ஆம் வகுப்புக்கு பொது தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்று தமிழக அரசுக்கு மஜக பொதுச் செயலாளரும், நாகை எம்எல்ஏவுமான மு.தமிமுன் அன்சாரி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
 

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 
 

தமிழகத்தில் இவ்வாண்டு முதல் 5 ஆம் வகுப்பு மற்றும் 8 ஆம் வகுப்புக்கு பொதுத் தேர்வுகள் நடத்தப்படும் என கல்வி அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்திருக்கிறார்.

 

THAMIMUN ANSARI


 

 கடந்த பிப்ரவரி மாதம் இது குறித்து பேசிய அவர், யாரும் இது குறித்து அச்சப்பட தேவையில்லை என்றும் அது போன்ற திட்டம் ஏதுமில்லை என்றும், அதை அனுமதிக்க மாட்டோம் என்றும் உறுதிபட அவர் கூறியிருந்தார்.
 

உலகிலேயே தொடர்க்க கல்வியில் சிறந்து விளங்கும் பின்லாந்து நாட்டுக்கு சென்றவர், பல மகிழத்தக்க அறிவிப்புகளை வழங்குவார்  என எதிர்பார்த்கிருந்த நிலையில், அவரது இந்த அறிவிப்பு ஏமாற்றமளிக்கிறது.


 

 இது மத்திய அரசின் புதிய கல்வி கொள்கையை அமல்படுத்தும் திட்டங்களின் தொடக்கமா? என்ற ஆழமான கேள்வியும் எழுகிறது.
 

இது காமராஜர், எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா, கலைஞர் போன்றவர்களின் கல்வித்துறை சார்ந்த  நிலைபாடுகளுக்கு எதிரான போக்காகும்.
 

 இந்த அறிவிப்பு, கிராமப்புற கல்வி வளர்ச்சியை பாதிக்கும் என்பதோடு, பின்தங்கிய சமூகங்களை சேர்ந்த மாணவ, மாணவிகளை பாதியிலேயே பள்ளிக்கூடங்களிலிருந்து விரட்டியடிக்கும்  பாதகமாகவும் முடியும் என்பதையும்  சுட்டிக் காட்டுகிறோம்.
 

 

கல்வியை நம் மண்ணின் சூழலுக்கு ஏற்ப, ஐனநாயக முறையில் சமப்படுத்த திட்டங்களை உருவாக்க வேண்டும் என்பதே மக்களின் விருப்பமாகும். எனவே இது குறித்து தமிழக அரசு மாவட்ட வாரியாக  கருத்துக் கேட்பு கூட்டங்களை நடத்த வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்.



 

ஆசிரியர்களுக்கு வேறு வேலைகளை தராமல் , அவர் தம் பணிகளில் மட்டும் கவனம் செலுத்த செய்வது, மாணவர்களின் கற்கும் திறனை மேம்படுத்துவது, வகுப்பறைகளை தரம் உயர்த்துவது, செயல்வழி கல்வி முறைகளை ஊக்குவிப்பது, தொடக்கப் பள்ளிகளிகளில் விளையாட்டு கல்வி ஆசிரியர்களை பணியமர்த்துவது , 25  மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர் என்ற நிலையை உருவாக்குவது என முற்போக்கு திட்டங்களை செயல்படுத்துவதில் தமிழக அரசு அக்கறைக் காட்ட வேண்டும். 


இதற்கு மாற்றான திட்டங்களை கைவிட வேண்டும். எல்லோருக்குமான எளிய கல்வியே இன்றைய தேவையாகும். எனவே, ஏழை, எளிய மற்றும் கிராமப்புற மக்களின் கல்வி முன்னேற்றத்தைப் பாதிக்கும் , 5. மற்றும் 8 ஆம் வகுப்புக்கு பொதுத் தேர்வு என்ற அறிவப்பை தமிழக அரசு வாபஸ் பெற வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம் என்றார். 

 

சார்ந்த செய்திகள்

Next Story

விடைத்தாளில் ‘ஜெய் ஸ்ரீ ராம்’ எழுதிய மாணவர்கள்; ஆசிரியர்களின் செயலால் அதிரடி நடவடிக்கை!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Action by teachers on Students wrote 'Jai Sri Ram' in the answer sheet

உத்தரப் பிரதேச மாநிலம், ஜான்பூர் பகுதியில் வீர் பகதூர் சிங் புர்வன்சால் பல்கலைக்கழகம் ஒன்று இயங்கி வருகிறது. இந்த பல்கலைக்கழகத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர். இந்நிலையில், இந்த பல்கலைக்கழத்தில் பி-பார்ம் பயின்ற முன்னாள் மாணவர்களிடம் பணம் பெற்றுக்கொண்டு, அவர்கள் எழுதிய தேர்வில் அவர்களை தேர்ச்சி பெற வைப்பதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. 

இது தொடர்பான புகாரை, பல்கலைக்கழகத்தின் மாணவர் சங்கத் தலைவர் திவ்யான்ஷு சிங், பல்கலைக்கழக துணைவேந்தரிடம் தெரிவித்துள்ளார். ஆனால், அவர் அளித்த புகார் மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. இதனையடுத்து, தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ், முன்னாள் மாணவர்கள் முதலாமாண்டு தேர்வில் எழுதிய விடைத்தாள்களின் நகலை எடுத்து சரி பார்த்துள்ளார். அதில், ஜெய் ஸ்ரீ ராம் என்றும், ஜெய் ஹனுமான் என்றும், கிரிக்கெட் வீரர்களான விராட் கோலி, ரோஹித் ஷர்மா என்ற வார்த்தைகளை மட்டும் எழுதி விடைத்தாள்களை நிரப்பியுள்ளனர். அந்த விடைத்தாள்களுக்கு 56% மதிப்பெண்களை ஆசிரியர்கள் மூலம் பெற்றுள்ளனர்.

இதில் அதிர்ச்சியடைந்த மாணவர் சங்கத் தலைவர் திவ்யான்ஷு சிங், இந்த விடைத்தாள்களை முறைப்படி மீண்டும் திருத்த சொன்ன போது, அதில் அனைவருக்கும் பூஜ்ஜியம் மதிப்பெண்கள் மட்டுமே கிடைத்துள்ளது. இதனையடுத்து, விடைத்தாள்களின் நகலையும், முறைப்படி திருத்தப்பட்ட விடைத்தாள்களையும் எடுத்து பல்கலைக்கழகத் துணைவேந்தருக்கு அனுப்பி இது குறித்து முழுமையான விசாரணை நடத்த வேண்டும் எனக் கோரிக்கை வைத்துள்ளார்.

அதன் அடிப்படையில், இந்த விவகாரம் குறித்து விசாரணை நடத்தப்பட்டதில், இந்த முறைகேட்டில் 2 ஆசிரியர்களுக்கு சம்பந்தம் இருப்பதாக தெரியவந்தது. அதன் பேரில், மாணவர்களிடம் பணத்தைப் பெற்று கொண்டு அவர்களை தேர்ச்சி பெற வைத்த அந்த 2 ஆசிரியர்களை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிடப்பட்டது. மேலும், இந்த விவகாரம் குறித்து தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. ஜெய் ஸ்ரீ ராம், ஜெய் ஹனுமான், கிரிக்கெட் வீரர்கள் பெயரை மட்டுமே எழுதி வைத்த மாணவர்களை தேர்ச்சி பெற வைத்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. 

Next Story

'இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வருவது அவசியம்' - தமிமுன் அன்சாரி பேட்டி

Published on 19/03/2024 | Edited on 19/03/2024
'It is necessary for the India coalition to come to power' - Tamimun Ansari interview

நாட்டின் 18வது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்த நாடாளுமன்றத் தேர்தலின் வாக்குப்பதிவு எண்ணிக்கை, ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் கூட்டணி, தொகுதிப் பங்கீடு எனத் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

இந்நிலையில் மனிதநேய ஜனநாயக கட்சியின் தமிமுன் அன்சாரி திமுக கூட்டணிக்கு தனது ஆதரவை தெரிவித்துள்ளார். முன்னதாக அவர் அதிமுக கூட்டணிக்கு ஆதரவு தெரிவிப்பதாக தகவல்கள் வெளியாகி இருந்த நிலையில், இன்று அண்ணா அறிவாலயத்திற்கு வந்து முதல்வரை சந்தித்து விட்டு பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த தமிமுன் அன்சாரி பேசுகையில், ''இந்த தேர்தலை பொறுத்தவரை மனிதனை ஜனநாயக கட்சி வெறும் அரசியல் காளமாக இதனைப் பார்க்கவில்லை.

மாறாக ஜனநாயகத்திற்கும் பாசிசத்திற்கும் இடையேயுமான சித்தாந்த போராட்டமாக பார்க்கிறது. அந்த அடிப்படையில் இந்த முடிவை மனிதநேய ஜனநாயக கட்சி எடுத்திருக்கிறது. திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை சந்தித்து எங்களுடைய ஆதரவை வழங்கி இருக்கிறோம். இந்தியாவுடைய ஜனநாயகம், பன்முக கலாச்சாரம், அரசியல் சாசன சட்டத்துடைய மாண்புகள், சமூக நல்லிணக்கம் ஆகியவை காப்பாற்றப்பட வேண்டும் என்றால் இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வருவது அவசியமாகிறது' என்றார்.