ADVERTISEMENT

கலையில் புலைமையானவர்களுக்கு விருது வழங்கிய ஆட்சியர்!

05:47 PM Sep 16, 2021 | lakshmanan@nak…

ADVERTISEMENT

ADVERTISEMENT

கலை விருதுகள், கலை பண்பாட்டுத் துறையின் கீழ் இயங்கி வரும் திருச்சி மாவட்ட கலை மன்றத்தின் வாயிலாக 2018-2019 ஆம் ஆண்டுகளுக்கு இயல், இசை மற்றும் நாடகம் முதலிய கலைகளில் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட கலைகளில் சிறந்து விளங்குபவர்களுக்கு விருது வழங்கி வருகின்றனர். இதில் 5 கலைஞர்களுக்கு வயது மற்றும் கலைப்புலமை அடிப்படையில் விருதுகள் வழங்க மாவட்ட ஆட்சியர் தலைமையில் தேர்வாளர் குழுத் தேர்வு செய்யப்பட்டனர்.

கலை இளமணி விருதிற்குப் பரதநாட்டிய கலைஞர் அபிநயா, கலைவளர்மணி விருதுக்கு முகர்சங்கு கலைஞர் சௌபாக்கிய லட்சுமி, கலைசுடர்மணி விருதுக்குச் சிலம்ப கலைஞர் தங்கராஜ், நடனக்கலை நன்மணி விருதிற்குக் கிராமியக் கலைஞர் சத்தியன், கலைமுதுமணி விருதுக்குத் தவில் கலைஞர் விஜி.முருகன் என்பவரும் தேர்வு செய்யப்பட்டனர். திரைப்பட கலைஞர்களுக்கு மாவட்ட ஆட்சியர் விருதுகள் மற்றும் சால்வை அணிவித்து காசோலைகளை வழங்கினார்.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT