ADVERTISEMENT
இன்று காலை நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 79.41 அடியாக குறைந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 537 கன அடியாக நீர் வந்து கொண்டிருக்கிறது. கீழ்பவானி வாய்க்கால் பாசனத்திற்கு முதல் சுற்று நீர் நிறுத்தப்பட்டுள்ளது.
ADVERTISEMENT
தடப்பள்ளி - அரக்கன் கோட்டை பாசனத்திற்கு 700 கன அடியும், குடிநீருக்காக பவானி ஆற்றுக்கு 100 கன அடியும் என மொத்தம் 800 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. குண்டேரிபள்ளம் அணையின் நீர்மட்டம் இன்று காலை நிலவரப்படி 39.52 அடியாகவும், பெரும்பள்ளம் அணையின் நீர்மட்டம் 2.82 அடியாகவும், வரட்டுப்பள்ளம் அணையின் நீர்மட்டம் 32.87 அடியாகவும் உள்ளது. மழை பொழிவு இல்லாததாலும், நீர் வரத்து குறைந்ததாலும் மாவட்டத்தில் உள்ள அணைகளின் நீர்மட்டம் தொடர்ந்து குறைந்து வருகிறது.
Show comments