ADVERTISEMENT

’தேவதாசி’ விவகாரம்: மன்னிப்பு  கேட்ட சின்மயி!

01:43 PM Dec 31, 2019 | Anonymous (not verified)

ADVERTISEMENT

திரைப்பட பின்னணி பாடகி சின்மயியின் தாயார் பத்மஹாசினி, தனியார் தொலைக்காட்சியின் விவாத நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசியபோது, ‘தேவதாசி முறை என்பது இந்த பூமிக்கும், மண்ணுக்கும், நம் பாரத தேசத்துக்கும் சொந்தமானது. அது எப்பேர்பட்ட உயர்வான முறை. அதை சிதைத்ததனால் நான் பெரியாரை மன்னிக்க மாட்டேன்’ என்று கூறி உள்ளார்.

ADVERTISEMENT

பத்மஹாசினியின் இந்தக் கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதனால், சின்மயியையும், அவரது தாயாரையும் மூக வலைதளங்களில் கடுமையான விமர்சித்து வருகின்றனர்.

இந்நிலையில், சின்மயி தனது டுவிட்டர் பக்கத்தில் தாயாரின் பேச்சுக்கு மன்னிப்பு கேட்டு பதிவிட்டுள்லார். அதில் ‘தேவதாசி முறையை நான் முற்றிலுமாக எதிர்க்கிறேன். என்னுடைய அம்மாவுடைய கருத்தில் எனக்கு உடன்பாடில்லை. அம்மாவின் கருத்துக்கு அவர்தான் பொறுப்பு. ஆனாலும் நான் மன்னிப்பு கேட்கிறேன்.’’ என்றும் தெரிவித்துள்ளார்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT