ADVERTISEMENT

குழந்தை விற்பனை விவகாரம்- அறக்கட்டளையின் நிறுவனர், உதவியாளர் கைது!

11:05 PM Jul 03, 2021 | santhoshb@nakk…

ADVERTISEMENT

ADVERTISEMENT

மதுரையில் கரோனாவால் மாணிக்கம் என்ற குழந்தை இறந்ததாக போலி மயான ரசீது காண்பித்து புதைத்ததாகப் பெற்றோரிடம் நாடகமாடி அந்த குழந்தையை விற்றது தெரியவந்தது. இதனைதொடர்ந்து, இதுகுறித்து காவல்துறையினர் நடத்திய விசாரணையில் மேலும் 2 குழந்தைகள் விற்கப்பட்டது தெரியவர, காவல்துறையினர் காப்பகத்திற்க்கு சீல் வைத்து தரகராக ஈடுபட்டவர்கள் மற்றும் குழந்தையை வாங்கியவர்கள் என 7 பேரை கைது செய்தனர்.

மேலும் இதன் முக்கிய குற்றவாளிகளான இதயம் அறக்கட்டளையின் நிறுவனர் சிவகுமார் மற்றும் உதவியாளர் மதார்ஷா ஆகிய இருவரையும் காவல்துறையினர் தீவிரமாகத் தேடி வந்த நிலையில் இன்று (03/07/2021) கேரளாவில் கைது செய்யப்பட்டனர்.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT