ADVERTISEMENT
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், சேலம் மாவட்டத்தில் தனது ஆய்வு பணியை முடித்துக்கொண்டு தருமபுரி மாவட்டத்திற்குச் செல்லும் வழியில், திடீரென்று வாகனத்தை நிறுத்தச் சொல்லி வழியில் அமைந்துள்ள B2 அதியமான் கோட்டை காவல் நிலையத்தை ஆய்வு செய்தார்.
ADVERTISEMENT
அப்போது, அங்கு பணியில் இருந்த காவல் நிலைய ஆய்வாளர் மற்றும் காவலர்களிடம் வழக்குகளின் பதிவேடுகள், பொதுமக்களின் புகார்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து கேட்டறிந்தார். மேலும், பொதுமக்களின் புகார்கள் மீது விரைவாகவும், நியாயமாகவும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென காவலர்களுக்கு அறிவுறுத்தல்களை வழங்கினார்.
Show comments