ADVERTISEMENT
இந்த நிலையில், பாதிப்புக்குள்ளான தென்மாவட்ட மக்களுக்காக அறிவிக்கப்பட்ட நிவாரணத் தொகையை வழங்க தொடங்கிவிட்டதாகத் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இது குறித்து தனது எக்ஸ் (ட்விட்டர்) பக்கத்தில் தெரிவித்ததாவது, ‘தென் மாவட்டங்களைப் புரட்டிப் போட்ட வெள்ளப் பாதிப்பிலிருந்து மக்கள் மீண்டெழ அறிவித்த நிவாரணத் தொகையை உடனடியாக வழங்கத் தொடங்கிவிட்டோம்.
ADVERTISEMENT
மழை வெள்ளம் ஏற்பட்டவுடன் மக்களுக்குத் துணையாகக் களத்தில் இருந்த அமைச்சர்களும் நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழியும் நிவாரணத் தொகையை மக்களிடம் வழங்கும் பணியைத் தொடங்கி வைத்தனர்’ என்று பதிவிட்டுள்ளார்.
Show comments